கோவை: கோவையில் முயல் வேட்டையாடிய மூன்று பேருக்கு அபராதம் விதித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கோவை: கோவையில் முயல் வேட்டையாடிய மூன்று பேருக்கு அபராதம் விதித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வீரபாண்டி - மாங்கரை சாலையில் உள்ள ஒரு தனியார் நிலத்தில் நேற்று சில நபர்கள் முயல் வேட்டையாடுவதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் முயல் வேட்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சசிகுமார் (29), சின்னராஜ் (35), ஆனந்தன் (40) ஆகிய மூன்று பேரையும் பிடித்தனர்.
மேலும், வனப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட வன அலுவலர் சதீஷ் கூறுகையில், "வன விலங்குகளைத் துன்புறுத்துபவர்கள் மீதான புகார்களை கொடுக்கவும், வனத்துறை அதிகாரிகள் முறையாக செயல்படவில்லை என்றால் அவர்கள் மீது புகார் அளிக்கவும் இந்த எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் 180042545456." என்றார்.
வீரபாண்டி - மாங்கரை சாலையில் உள்ள ஒரு தனியார் நிலத்தில் நேற்று சில நபர்கள் முயல் வேட்டையாடுவதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் முயல் வேட்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சசிகுமார் (29), சின்னராஜ் (35), ஆனந்தன் (40) ஆகிய மூன்று பேரையும் பிடித்தனர்.
மேலும், வனப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட வன அலுவலர் சதீஷ் கூறுகையில், "வன விலங்குகளைத் துன்புறுத்துபவர்கள் மீதான புகார்களை கொடுக்கவும், வனத்துறை அதிகாரிகள் முறையாக செயல்படவில்லை என்றால் அவர்கள் மீது புகார் அளிக்கவும் இந்த எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் 180042545456." என்றார்.