கோவை : சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் வங்கிக்குச் சொந்தமான ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேசி வருகின்றனர்.
கோவை : சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் வங்கிக்குச் சொந்தமான ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேசி வருகின்றனர்.
சரவணம்பட்டியை அடுத்த அம்மன் கோவில் அருகில் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது. அந்த மையத்திற்குள் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முயன்றுள்ளனர். இயந்திரத்தை உடைக்க முடியாததால் பாதியில் விட்டுச் சென்றனர். அதே போல், அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராக்களையும் சேதப்படுத்திச் சென்றனர்.
இது தொடர்பாக வங்கி நிர்வாகத்தினர் போலீசாருக்கு அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சரவணம்பட்டியை அடுத்த அம்மன் கோவில் அருகில் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது. அந்த மையத்திற்குள் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முயன்றுள்ளனர். இயந்திரத்தை உடைக்க முடியாததால் பாதியில் விட்டுச் சென்றனர். அதே போல், அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராக்களையும் சேதப்படுத்திச் சென்றனர்.
இது தொடர்பாக வங்கி நிர்வாகத்தினர் போலீசாருக்கு அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.