சென்னை: பெண் செய்தியாளர் கன்னத்தைத் தட்டிய சம்பவத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மன்னிப்பு கோரியுள்ளார்.
சென்னை: பெண் செய்தியாளர் கன்னத்தைத் தட்டிய சம்பவத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மன்னிப்பு கோரியுள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று மாலை சென்னை ராஜ்பவனில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, பேராசிரியரின் பாலியல் புகார் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த அவர், நிர்மலா தேவி யார் என்றே தனக்கு தெரியாது என்றார். மேலும், தனக்கு கொள்ளுப் பேரன் இருப்பதாக பதிலளித்த அவர், செய்தியாளர்களின் தொடர்ச்சியான கேள்விகளுக்குத் திணறினார்.
இது குறித்து தனியார் செய்தித்தாள் ஒன்றின் பெண் செய்தியாளர் மீண்டும் கேள்வியெழுப்ப, அந்த செய்தியாளரின் கன்னத்தில் செல்லமாக தட்டினார் ஆளுநர்.
இதற்கு பலரும் கண்டனங்களைத் தெரிவித்த நிலையில், ஆளுநர், தான் அவ்வாறு நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கோரி பெண் செய்தியாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், " உங்கள் கேள்வி மிக அருமையாக இருந்தது. அதனால், தங்களை பாராட்டும் விதமாகவும், எனது பேத்தி போல் எண்ணியும் தான் கன்னத்தில் தட்டினேன். அது தங்களை காயப்படுத்தியதாக அறிகிறேன். அதனால், எனது வருத்தத்தையும், மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
