பெண் செய்தியாளரின் கன்னத்தில் தட்டியதற்கு மன்னிப்பு கோரினார் தமிழக ஆளுநர்

சென்னை: பெண் செய்தியாளர் கன்னத்தைத் தட்டிய சம்பவத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மன்னிப்பு கோரியுள்ளார்.


சென்னை: பெண் செய்தியாளர் கன்னத்தைத் தட்டிய சம்பவத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மன்னிப்பு கோரியுள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று மாலை சென்னை ராஜ்பவனில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, பேராசிரியரின் பாலியல் புகார் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த அவர், நிர்மலா தேவி யார் என்றே தனக்கு தெரியாது என்றார். மேலும், தனக்கு கொள்ளுப் பேரன் இருப்பதாக பதிலளித்த அவர், செய்தியாளர்களின் தொடர்ச்சியான கேள்விகளுக்குத் திணறினார்.

இது குறித்து தனியார் செய்தித்தாள் ஒன்றின் பெண் செய்தியாளர் மீண்டும் கேள்வியெழுப்ப, அந்த செய்தியாளரின் கன்னத்தில் செல்லமாக தட்டினார் ஆளுநர்.

இதற்கு பலரும் கண்டனங்களைத் தெரிவித்த நிலையில், ஆளுநர், தான் அவ்வாறு நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கோரி பெண் செய்தியாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், " உங்கள் கேள்வி மிக அருமையாக இருந்தது. அதனால், தங்களை பாராட்டும் விதமாகவும், எனது பேத்தி போல் எண்ணியும் தான் கன்னத்தில் தட்டினேன். அது தங்களை காயப்படுத்தியதாக அறிகிறேன். அதனால், எனது வருத்தத்தையும், மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.


Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...