காஷ்மீர்: கதுவா-வில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் புகைப்படம் மற்றும் பெயரை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
காஷ்மீர்: கதுவா-வில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் புகைப்படம் மற்றும் பெயரை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
காஷ்மீரில் உள்ள கதுவா மாவட்டத்தைச் சேர்ந்த, 8 வயது சிறுமியை, ஒரு கும்பல் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாகக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில், காவல்துறை அதிகாரி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக நாட்டில் உள்ள அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. செய்திகளில் பல்வேறு ஊடகங்கள் சிறுமியின் புகைப்படத்தையும் பெயரையும் வெளியிட்டன.
18 வயதுக்குக் குறைவான குழந்தைகளின் புகைப்படம் அல்லது அவர்களது அடையாளங்களை ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தக்கூடாது என்ற சட்டம் உள்ள நிலையில், சில ஊடகங்கள் சிறுமியின் பெயரையும் புகைப்படத்தையும் வெளியிட்டது.
இந்த நிலையில், சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. அந்த அபராதத் தொகையை காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒதுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.