கதுவா விவகாரம்: சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்

காஷ்மீர்: கதுவா-வில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் புகைப்படம் மற்றும் பெயரை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


காஷ்மீர்: கதுவா-வில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் புகைப்படம் மற்றும் பெயரை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

காஷ்மீரில் உள்ள கதுவா மாவட்டத்தைச் சேர்ந்த, 8 வயது சிறுமியை, ஒரு கும்பல் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாகக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில், காவல்துறை அதிகாரி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக நாட்டில் உள்ள அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. செய்திகளில் பல்வேறு ஊடகங்கள் சிறுமியின் புகைப்படத்தையும் பெயரையும் வெளியிட்டன. 

18 வயதுக்குக் குறைவான குழந்தைகளின் புகைப்படம் அல்லது அவர்களது அடையாளங்களை ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தக்கூடாது என்ற சட்டம் உள்ள நிலையில், சில ஊடகங்கள் சிறுமியின் பெயரையும் புகைப்படத்தையும் வெளியிட்டது. 

இந்த நிலையில், சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. அந்த அபராதத் தொகையை காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒதுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...