நீலகிரி: குன்னூரில் தென் பிராந்திய ராணுவ வீரர்களுக்கான நெடுந்தூர ஓட்டப்பந்தையம் எம்.ஆர்.சி.தங்கராஜ் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
நீலகிரி: குன்னூரில் தென் பிராந்திய ராணுவ வீரர்களுக்கான நெடுந்தூர ஓட்டப்பந்தையம் எம்.ஆர்.சி.தங்கராஜ் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
ஆண்டுதோறும் தென் பிராந்திய ராணுவ வீரர்களுக்கான நெடுந்தூர ஓட்டப்பந்தையம் குன்னூர் ராணுவ மையத்தின் சார்பில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான 10 கிலோ மீட்டர் நெடுந்தூர ஓட்டப்பந்தையத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தெற்கு கட்டளைக்கு கீழ் வரும் 10 குழுக்களைச் சேர்ந்த 60 ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர். மொத்தம் 10 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்ற இந்த நெடுந்தூர ஓட்டப்பந்தையம், குன்னூர் தங்கராஜ் ஸ்டேடியத்தில் தொடங்கி சிங்கார தோப்பு வழியாக மீண்டும் ஸ்டேடியத்தை வந்தடைந்தது.
பெங்களூர் ராணுவ மையத்தைச் சேர்ந்த அவில்தார்பி முதலிடத்தைப் பிடித்து வெற்றிபெற்றார். வெற்றி பெற்றவர்களுக்கு எம்.ஆர்.சி. ராணுவ மைய தலைவர் பிரிகேடியர் எஸ்.கே.சாங்வான்பரி சுழற்கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.

ஆண்டுதோறும் தென் பிராந்திய ராணுவ வீரர்களுக்கான நெடுந்தூர ஓட்டப்பந்தையம் குன்னூர் ராணுவ மையத்தின் சார்பில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான 10 கிலோ மீட்டர் நெடுந்தூர ஓட்டப்பந்தையத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தெற்கு கட்டளைக்கு கீழ் வரும் 10 குழுக்களைச் சேர்ந்த 60 ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர். மொத்தம் 10 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்ற இந்த நெடுந்தூர ஓட்டப்பந்தையம், குன்னூர் தங்கராஜ் ஸ்டேடியத்தில் தொடங்கி சிங்கார தோப்பு வழியாக மீண்டும் ஸ்டேடியத்தை வந்தடைந்தது.
பெங்களூர் ராணுவ மையத்தைச் சேர்ந்த அவில்தார்பி முதலிடத்தைப் பிடித்து வெற்றிபெற்றார். வெற்றி பெற்றவர்களுக்கு எம்.ஆர்.சி. ராணுவ மைய தலைவர் பிரிகேடியர் எஸ்.கே.சாங்வான்பரி சுழற்கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.
