நொய்யலில் மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட மூன்று வாகனங்கள் பறிமுதல்

கோவை: நொய்யல் ஆற்றுப்படுகையில் மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட மூன்று வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோவை: நொய்யல் ஆற்றுப்படுகையில் மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட மூன்று வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நொய்யல் ஆற்றுப்படுகையில் சட்ட விரோதமாக மணல் அள்ளும் வீடியோ காட்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகியது. அந்த வீடியோ-வில் காவல்துறை மற்றும் வருவாய்த் துறைக்கு லஞ்சம் கொடுத்து தான் மணல் அள்ளுவதாக சிலர் பேசும் காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியது.

நொய்யலில் சட்ட விரோதமாக மணல் அள்ளினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். அதனைத் தொடர்ந்து, விதி மீறி நொய்யலில் மணல் அள்ளுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.



இந்த நிலையில், நேற்று ஆற்றுப்படுகையில் இருந்து சட்ட விரோதமாக மணல் ஏற்றி வந்த மினி லாரி ஒன்றையும் அதன் பின் வந்த இருசக்கர வாகனத்தையும் நரசிபுரம் அருகே போலீசார் மடக்கிப் பிடித்தனர். மேலும், காருண்யா நகர் பகுதியில் மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டியையும் போலீசார் பிடித்தனர். ஆனால், அந்த வாகனங்களில் வந்த நபர்கள் தப்பியோடியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.



தப்பியோடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...