மனித - விலங்குகள் மோதலை தடுக்கும் சிறப்பு குழுக்கள் நியமனம்

நீலகிரி: மனித விலங்குகள் மோதலை தடுக்கும் வகையில் சிறப்பு குழுக்கள் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார்.


நீலகிரி: மனித -  விலங்குகள் மோதலை தடுக்கும் வகையில் சிறப்பு குழுக்கள் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார்.



மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியைக் கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. 

இந்நிலையில், யானை, காட்டெருமை, கரடி போன்ற வன விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி கிராமப் புறங்களிலும், நகர் பகுதிகளிலும் வருவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக, குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் காட்டெருமை, கரடி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விளை நிலங்களை சூறையாடி வருகின்றன. இதனால், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு, மனித உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது.

இதனைத் தடுக்கும் முயற்சியில் வனத்துறை சார்பில் 9 பேர் கொண்ட சிறப்பு குழுக்களை இன்று உதகையில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் வன விலங்குகள் தொடர்பாக பொதுமக்கள் உடனடியாக 0423-2440968 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு தொடர்பு கொண்டால், உடனடியாக அப்பகுதிக்கு சிறப்பு குழுக்கள் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று வனவிலங்குகளை விரட்டும் பணியில் ஈடுபடுவார்கள். தற்போது, நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 3 சிறப்பு குழுக்கள் ஈடுபடவுள்ளனர்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...