நீலகிரி: கல்லட்டி மலைப்பாதையில் சாலை விபத்துக்கள் தொடர்ந்து வரும் நிலையில், நேற்று கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுற்றுலா சென்ற 5 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே பலியானார்.
நீலகிரி: கல்லட்டி மலைப்பாதையில் சாலை விபத்துக்கள் தொடர்ந்து வரும் நிலையில், நேற்று கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுற்றுலா சென்ற 5 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே பலியானார்.
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 4 சிறுவர்கள் உட்பட 8 பேர் நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள சுற்றுலா தலங்களைக் கண்டு ரசித்துவிட்டு நேற்று கர்நாடகா மாநிலத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அவர்களது கார் கல்லட்டி மலைப்பாதை வழியாகச் சென்றது.
அப்போது, 23- வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாரத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த பாறை மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த அவனி (வயது 5) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், காரில் பயணித்த ஆதித்தி (1.½), நிஷலோ (8), சம்மந்தி (6), சந்தியா (33), விநாயக் (37), சபிதா (30), நவீன் (38) ஆகியோர் படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
