கல்லட்டி மலைப்பாதையில் தொடரும் விபத்துக்கள்: சாலை விபத்தில் 5 வயது சிறுமி பலி

நீலகிரி: கல்லட்டி மலைப்பாதையில் சாலை விபத்துக்கள் தொடர்ந்து வரும் நிலையில், நேற்று கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுற்றுலா சென்ற 5 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே பலியானார்.



நீலகிரி: கல்லட்டி மலைப்பாதையில் சாலை விபத்துக்கள் தொடர்ந்து வரும் நிலையில், நேற்று கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுற்றுலா சென்ற 5 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே பலியானார்.

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 4 சிறுவர்கள் உட்பட 8 பேர் நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள சுற்றுலா தலங்களைக் கண்டு ரசித்துவிட்டு நேற்று கர்நாடகா மாநிலத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அவர்களது கார் கல்லட்டி மலைப்பாதை வழியாகச் சென்றது.

அப்போது, 23- வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாரத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த பாறை மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த அவனி (வயது 5) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், காரில் பயணித்த ஆதித்தி (1.½), நிஷலோ (8), சம்மந்தி (6), சந்தியா (33), விநாயக் (37), சபிதா (30), நவீன் (38) ஆகியோர் படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...