அத்திக்கடவு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி கிராம மக்கள் தீர்த்தக்குட யாத்திரை வழிபாடு

கோவை : அத்திக்கடவு - அவினாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி கிராமமக்கள் சார்பில் மேட்டுப்பாளையம் பவானியாற்று நீரை எடுத்து தீர்த்தக்குட யாத்திரை வழிபாடு நடத்தப்பட்டது.

கோவை : அத்திக்கடவு - அவினாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி கிராமமக்கள் சார்பில் மேட்டுப்பாளையம் பவானியாற்று நீரை எடுத்து தீர்த்தக்குட யாத்திரை வழிபாடு நடத்தப்பட்டது. 

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் ஓடும் பவானி ஆற்றில் இருந்து மழைக்காலங்களில் சேரும் உபரி நீரை திருப்பி கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் வறட்சியான கிராமங்களில் உள்ள குளம் குட்டைகளை நிரப்பும் திட்டமே அத்திக்கடவு - அவினாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டமாகும். நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள், சிறு நகரங்கள் பெரிதும் பயன்பெறும் இத்திட்டத்தை நிறைவேற்றப் பல ஆண்டுகளாக பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது இத்திட்டத்திற்கான முதற்கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் போராட்டக்குழு சார்பில் சித்திரை முதல் தேதியன்று மேட்டுப்பாளையத்தில் ஓடும் பவானியாற்றில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட குடங்களில் நீர் எடுத்து இங்குள்ள வனபத்திர காளியம்மன் கோவிலில் வைத்து வழிபாடு செய்யப்படுவது வழக்கம். பின்னர் இத்தீர்த்த குடங்களோடு தங்களது கிராமங்களுக்கு சென்று அங்குள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகளை செய்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக சித்திரை முதல் தேதியான இன்றும் அன்னூர், வடவள்ளி, குப்பேபாளையம், பிள்ளையப்பம்பாளையம், தெக்கலூர், நம்பியாம்பாளையம் உள்ளிட்ட பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட தீர்த்த குடங்களில் பவானியாற்று நீரை சேகரித்து ஆற்றங்கரையில் உள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் வழிபாடு நடத்தினர். பின்னர், இக்குடங்களை தங்களது ஊர்களுக்கு யாத்திரையாக எடுத்து சென்று கிராம கோவில்களில் உச்சிகால பூஜைகள் நடத்தினர். 

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...