கோவை : பள்ளி குழந்தைகளிடையே சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சிறுதுளி தொண்டு நிறுவனத்தின் சார்பில் சிறப்பு கோடை முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவை : பள்ளி குழந்தைகளிடையே சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சிறுதுளி தொண்டு நிறுவனத்தின் சார்பில் சிறப்பு கோடை முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறுதுளி அமைப்பின் சார்பில் நடத்தப்படும் 'நியூட்சர் நேட்சர் கேம்ப் 2018' வரும் 16-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடக்கிறது. இதில், மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 120 மாணவர்கள் மற்றும் 30 ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த முகாமில், நொய்யல் ஆற்றின் தூய்மைப் படுத்துவது போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகள் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்படும். மேலும், மாடித் தோட்டம், கழிவுகள் மறுசுழற்சி போன்றவை குறித்தும் விளக்கப்படுகிறது. இந்த முகாமானது, வரும் திங்கட்கிழமை குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே., அப்துல்கலாம் நடவு செய்த பச்சை நாயகி மரத்தின் அருகே காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
சிறுதுளி அமைப்பின் சார்பில் நடத்தப்படும் 'நியூட்சர் நேட்சர் கேம்ப் 2018' வரும் 16-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடக்கிறது. இதில், மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 120 மாணவர்கள் மற்றும் 30 ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த முகாமில், நொய்யல் ஆற்றின் தூய்மைப் படுத்துவது போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகள் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்படும். மேலும், மாடித் தோட்டம், கழிவுகள் மறுசுழற்சி போன்றவை குறித்தும் விளக்கப்படுகிறது. இந்த முகாமானது, வரும் திங்கட்கிழமை குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே., அப்துல்கலாம் நடவு செய்த பச்சை நாயகி மரத்தின் அருகே காலை 8 மணிக்கு தொடங்குகிறது.