கோவை : முறையற்ற விநியோகத்தால் ஆறு மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாகக் கூறி மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த மூன்று கிராம மக்கள் இன்று காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை : முறையற்ற விநியோகத்தால் ஆறு மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாகக் கூறி மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த மூன்று கிராம மக்கள் இன்று காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பிளிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட பெட்டதாபுரம், மத்தம்பாளையம், பிளிச்சி கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
மாதம் ஓரிரு முறை மட்டுமே குறைந்த அளவில் குடிநீர் வழங்கப்படுவதால் இக்கிராமங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாகக் குற்றம் சாட்டும் கிராம மக்கள், அப்பகுதிகளில் பல இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகி வருவதாகவும், அதனை சரி செய்து சீராக குடிநீர் வழங்க கோரி பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை என்று புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும், இக்கிராமங்களில் போடப்பட்டிருந்த ஆழ்குழாய் கிணறுகளும் பராமரிப்பின்றி பழுதடைந்து கிடப்பதால் கோடைக்காலத்தில் தண்ணீரின்றி தவித்த மக்கள் இன்று கோவை-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் மூன்று மணிநேரம் நீடித்த இந்த மறியல் போராட்டம் காரணமாக இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் காவல் துறை துணை கண்காணிப்பாளர் மணி ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பிளிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட பெட்டதாபுரம், மத்தம்பாளையம், பிளிச்சி கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
மாதம் ஓரிரு முறை மட்டுமே குறைந்த அளவில் குடிநீர் வழங்கப்படுவதால் இக்கிராமங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாகக் குற்றம் சாட்டும் கிராம மக்கள், அப்பகுதிகளில் பல இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகி வருவதாகவும், அதனை சரி செய்து சீராக குடிநீர் வழங்க கோரி பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை என்று புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும், இக்கிராமங்களில் போடப்பட்டிருந்த ஆழ்குழாய் கிணறுகளும் பராமரிப்பின்றி பழுதடைந்து கிடப்பதால் கோடைக்காலத்தில் தண்ணீரின்றி தவித்த மக்கள் இன்று கோவை-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் மூன்று மணிநேரம் நீடித்த இந்த மறியல் போராட்டம் காரணமாக இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் காவல் துறை துணை கண்காணிப்பாளர் மணி ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.