சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் உற்சவ திருவிழா 15-ம் தேதி தொடக்கம்

கோவை : சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் 49-வது உற்சவ திருவிழா வரும் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

கோவை : சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் 49-வது உற்சவ திருவிழா வரும் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

கோவை சித்தாபுதூரில் அமைந்துள்ள ஐயப்பன் கோவில் இரண்டாம் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலின் 49-வது உற்சவ திருவிழா வரும் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

இது தொடர்பாக நிர்வாகிகள் கூறுகையில், "வரும் 15-ம் தேதி சித்திரை கனி திருநாளன்று காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் உற்சவ திருவிழா தொடங்க உள்ளது. 

தொடர்ந்து, 16-ம் தேதி சிறப்பு பூஜைகளும், அன்று மாலை இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. 17-ம் தேதி காலை களபாபிஷேக சிறப்பு பூஜைகளும், 18-ம் மற்றும் 19-ம் தேதிகளில் சிறப்பு பூஜைகளும், 20-ம் தேதி உற்சவ பலி, சிறப்பு தரிசனம், ஸ்ரீ சக்கர பூஜை, கோமாதா பூஜை ஆகியன நடைபெறும்.

21-ம் தேதி காலை 6.30-க்கு தீபாரதனைக்குப் பின்னர் அலங்கரிக்கப்பட்ட ஐயப்பன் சுவாமி செண்டை மேளம், பஞ்சவாத்தியம் முழங்க ஆவரம்பாளையம் விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்டு, ஐய்யப்பன் கோவிலுக்கு வந்தடையும். 

மேலும், 22-ம் தேதி மாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ஐந்து யானைகளுடன் காவடியாட்டம், தெய்யம், பூதன் திறை, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்துடன் நகர்வலம் நடைபெற்று, ஐந்து யானைகளுடன் ஆறாட்டு திருவீதி உலாவுடன் நிறைவடையும்." என்றனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...