ஒரே நேரத்தில் மூன்று கின்னஸ் சாதனை படைத்த திருப்பூர் மாணவி

திருப்பூர் : திருப்பூரைச் சேர்ந்த 10 வகுப்பு மாணவி யோகாவில் பல்வேறு முறைகளை திறம்பட செய்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

திருப்பூர் : திருப்பூரைச் சேர்ந்த 10 வகுப்பு மாணவி யோகாவில் பல்வேறு முறைகளை திறம்பட செய்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

திருப்பூரைச் சேர்ந்த வைஷ்ணவி என்ற மாணவி கோவை கனியூர் பகுதியிலுள்ள பார்க் குளோபல் பள்ளியில் 10 வகுப்பு பயின்று வருகிறார். தனது ஒன்பது வயது முதல் யோகாவில் ஆர்வம் செலுத்தி வரும் இந்த மாணவி பல்வேறு தேசிய அளவிலான யோகா போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். இந்த நிலையில், கின்னஸ் சாதனைக்கான முயற்சியை தான் பயின்று வரும் பள்ளியில் இன்று அவர் மேற்கொண்டார். 



முன்னதாக, செலபாஸ் என்று அழைக்கப்படும் மார்பு பகுதியை மட்டும் தரையில் படும் படி உடலை வளைத்து உருண்ட படி சுமார் 13.8 வினாடிகளில் 20 மீட்டர் தூரத்தை அடைந்து புதிய சாதனை படைத்தார். இதற்கு முன் 15 வினாடிகளில் எட்டியதே சாதனையாக இருந்தது. இதேபோல், முக தாடையை தரையில் ஊன்றி ஏற்கனவே 2 நிமிடங்கள் யோகாசனம் செய்யப்பட்ட சாதனையை, சுமார் 7 நிமிட நேரம் நிலைத்து புதிய சாதனையை புரிந்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார்.



இது மட்டுமின்றி முறுக்கிய மார்பு நிலையில் பாதத்தை பயன்படுத்தி ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த குடுவைகளில் முட்டைகளை 18.28 வினாடி நேரத்தில் வைத்து கின்னஸ் சாதனை படைத்தார். ஒரே நேரத்தில் யோகாவில் மூன்று கின்னஸ் சாதனை படைத்த அம்மாணவி மேலும் இரண்டு வகை யோகா முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...