கோவை : அரசு போக்குவரத்து கழக ஒய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பாக கோவை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பேருந்து நிலைய பணிமனை முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை : அரசு போக்குவரத்து கழக ஒய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பாக கோவை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பேருந்து நிலைய பணிமனை முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து ஒய்வு அரசு போக்குவரத்து கழக ஒய்வு பெற்றோர் நல அமைப்பு செயலாளர் சேது ராமன் கூறுகையில், "போக்குவரத்துக் கழகத்தில் ஒய்வு பெற்றோருக்கு கடந்த நான்கு மாத காலமாக ஓய்வூதியம் இன்னும் வழங்கப்படவில்லை, மேலும் பஞ்சப்படியும் தமிழக அரசு உயர்த்தவில்லை. அதை உயர்த்தித் தர வேண்டும். புதிய சம்பள திட்டப்படி ஓய்வூதியத்தை உயர்த்தித் தர வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கவே இந்த ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது." என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து ஒய்வு அரசு போக்குவரத்து கழக ஒய்வு பெற்றோர் நல அமைப்பு செயலாளர் சேது ராமன் கூறுகையில், "போக்குவரத்துக் கழகத்தில் ஒய்வு பெற்றோருக்கு கடந்த நான்கு மாத காலமாக ஓய்வூதியம் இன்னும் வழங்கப்படவில்லை, மேலும் பஞ்சப்படியும் தமிழக அரசு உயர்த்தவில்லை. அதை உயர்த்தித் தர வேண்டும். புதிய சம்பள திட்டப்படி ஓய்வூதியத்தை உயர்த்தித் தர வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கவே இந்த ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது." என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.