சட்டவிரோதமாக மானை வேட்டையாடிய வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தடை விதிக்கப்பட்ட பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
சட்டவிரோதமாக மானை வேட்டையாடிய வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தடை விதிக்கப்பட்ட பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
ராஜஸ்தானில் கடந்த 1998-ம் ஆண்டு செப்டம்பரில் ''ஹம் சாத் ஹம் சாத் ஹயெ்ன்'' என்ற இந்தி படப்பிடிப்பு நடந்தது. அப்போது, பகாவாத் வனப்பகுதியில்,சிங்காரா, பிளாக்பெக் போன்ற அரியவகை மான்களை வேட்டையாடியதாக பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான், சயீப் அலிகான், நடிகைகள் தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் உள்ளிட்டோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2007-ம் ஆண்டு சல்மான்கான் உள்ளிட்ட 7 பேருக்கு ஜோத்பூர் கிளை நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்றம், சல்மான்கானை விடுதலை செய்தது. ஆனால், ராஜஸ்தான் அரசு சல்மான்கானுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கை ஜோத்பூர் சிறப்பு நீதிமன்றம், சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இதனை அடுத்து, அவர் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, சல்மான்கான் தரப்பில் ஜாமீன் கோரி ஜோத்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மாஜிஸ்திரேட் ரவீந்திர குமார் ஜோஷி முன்பு நேற்று (ஏப்.,6) விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதத்துக்குப் பின், ஜாமின் மனு மீதான தீர்ப்பை இன்று வழங்குவதாக மாஜிஸ்திரேட் அறிவித்தார். இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, சல்மான்கானுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
ராஜஸ்தானில் கடந்த 1998-ம் ஆண்டு செப்டம்பரில் ''ஹம் சாத் ஹம் சாத் ஹயெ்ன்'' என்ற இந்தி படப்பிடிப்பு நடந்தது. அப்போது, பகாவாத் வனப்பகுதியில்,சிங்காரா, பிளாக்பெக் போன்ற அரியவகை மான்களை வேட்டையாடியதாக பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான், சயீப் அலிகான், நடிகைகள் தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் உள்ளிட்டோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2007-ம் ஆண்டு சல்மான்கான் உள்ளிட்ட 7 பேருக்கு ஜோத்பூர் கிளை நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்றம், சல்மான்கானை விடுதலை செய்தது. ஆனால், ராஜஸ்தான் அரசு சல்மான்கானுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கை ஜோத்பூர் சிறப்பு நீதிமன்றம், சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இதனை அடுத்து, அவர் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, சல்மான்கான் தரப்பில் ஜாமீன் கோரி ஜோத்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மாஜிஸ்திரேட் ரவீந்திர குமார் ஜோஷி முன்பு நேற்று (ஏப்.,6) விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதத்துக்குப் பின், ஜாமின் மனு மீதான தீர்ப்பை இன்று வழங்குவதாக மாஜிஸ்திரேட் அறிவித்தார். இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, சல்மான்கானுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.