கோவையில் பா.ஜ.க நிர்வாகிகளின் கார்களுக்கு தீ வைத்தவர்கள் பிடிபடுவார்கள் - மாநகர காவல்துறை

கோவை: கோவையில் பா.ஜ.க நிர்வாகிகளின் கார்களுக்கு தீ வைத்தவர்களை அதி நவீன தொழில்நுட்ப குழுவினர் மூலம் தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கோவை: கோவையில் பா.ஜ.க நிர்வாகிகளின் கார்களுக்கு தீ வைத்தவர்களை அதி நவீன தொழில்நுட்ப குழுவினர் மூலம் தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி பா.ஜ.க-வின் கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார் மற்றும் செல்வபுரம் உமாபதி ஆகியோரது வீடுகளில் நின்ற கார்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர்.

இந்த வழக்குகளில், குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து போலீசார் கூறுகையில், "இதுவரை 100-க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளோம். இந்த சம்பவம் தொடர்பாக 600-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்களை கண்காணித்துள்ளோம். அதில் காட்சிகள் தெளிவாக தெரியாததால் குற்றவாளிகளைப் பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவியுடன் விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்." என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...