கோவை: கோவையில் பா.ஜ.க நிர்வாகிகளின் கார்களுக்கு தீ வைத்தவர்களை அதி நவீன தொழில்நுட்ப குழுவினர் மூலம் தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவையில் பா.ஜ.க நிர்வாகிகளின் கார்களுக்கு தீ வைத்தவர்களை அதி நவீன தொழில்நுட்ப குழுவினர் மூலம் தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி பா.ஜ.க-வின் கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார் மற்றும் செல்வபுரம் உமாபதி ஆகியோரது வீடுகளில் நின்ற கார்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர்.
இந்த வழக்குகளில், குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து போலீசார் கூறுகையில், "இதுவரை 100-க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளோம். இந்த சம்பவம் தொடர்பாக 600-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்களை கண்காணித்துள்ளோம். அதில் காட்சிகள் தெளிவாக தெரியாததால் குற்றவாளிகளைப் பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவியுடன் விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்." என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி பா.ஜ.க-வின் கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார் மற்றும் செல்வபுரம் உமாபதி ஆகியோரது வீடுகளில் நின்ற கார்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர்.
இந்த வழக்குகளில், குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து போலீசார் கூறுகையில், "இதுவரை 100-க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளோம். இந்த சம்பவம் தொடர்பாக 600-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்களை கண்காணித்துள்ளோம். அதில் காட்சிகள் தெளிவாக தெரியாததால் குற்றவாளிகளைப் பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவியுடன் விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்." என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.