மது குடிக்க பணம் தராத நண்பரை அடித்துக் கொன்றவர் கைது

திருப்பூரில் மது குடிக்க பணம் தராத காரணத்தால் நண்பரை அடித்துக் கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.


திருப்பூர் : திருப்பூரில் மது குடிக்க பணம் தராத காரணத்தால் நண்பரை அடித்துக் கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். திருப்பூர் மாவட்டம் நெசவாளர் காலனியில் தங்கி கூலி தொழில் செய்து வந்தார். 

இந்த நிலையில், இன்று அப்பகுதியில் உள்ள நல்லாற்றங்கரையில் தலை மற்றும் முகத்தில் படுகாயங்களுடன் வேல்முருகன் சடலமாக கிடந்தார்.  இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர், இச்சம்பவம் குறித்து அவர் பணியாற்றிய இடம் மற்றும் அவர் தங்கியிருந்த பகுதிகளில் விசாரித்தனர். அப்போது, சுபாஷ் என்பவருடன் வேல்முருகன் கடைசியாக சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, சுபாஷிடம் விசாரணை நடத்தினர். அப்போது, வேல்முருகனிடம் மது அருந்த பணம் கேட்ட போது அவர் தர மறுத்ததால் அருகில் இருந்த கட்டையால் அடித்து தாக்கி கொலை செய்ததாக சுபாஷ் வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து அவரை வேலம்பாளையம் காவல் துறையினர் கைது செய்தனர். 

மது அருந்த பணம் தராததால் நண்பனை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...