மலைப்பகுதியை சுரண்டி மணல் கடத்தும் கும்பல்: கண்டுகொள்ளாத வருவாய்த்துறை

ஈரோடு: சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள தடுப்பணைகளில் பட்டப்பகலில் நடைபெறும் மண்ல் கடத்தலை வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஈரோடு: சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள தடுப்பணைகளில் பட்டப்பகலில் நடைபெறும் மண்ல் கடத்தலை வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள கிராமங்களில் மழை நீரை சேகரிக்க பல்வேறு பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக தடுப்பணைகளில் தண்ணீர் நிரம்பியிருந்ததால் சுற்றுவட்£ர பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது.

இந்நிலையில், தற்போது கடுமையான வெயில் காரணமாக பெரும்பாலான தடுப்பணைகளில் தண்ணீர் வற்றியதால் அதிக அளவில் மணல் படிந்துள்ளது. தடுப்பணைகளில் படிந்துள்ள மணலை மர்ம நபர்கள் பட்டப்பகலில் அள்ளி டிராக்டரில் லோடு ஏற்றி விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். 



இதுகுறித்து சமுக ஆர்வலர்கள் கூறுகையில், "இரவு பகல் பாராமல் மணலை திருடி டிராக்டரில் ஏற்றி ரு.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை விற்பனை செய்கின்றனர். வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் மணல் திருட்டை கண்டுகொள்ளாமல் உள்ளனர். மணல் திருட்டில் ஈடுபடுவோரிடம் கிராம மக்கள் கேட்டால் பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ-விடம் அனுமதி கேட்டு மணல் அள்ளுவதாகவும், நீங்கள் எந்த அதிகாரிகளிடம் மணல் திருட்டு குறித்து தகவல் தெரிவித்தாலும் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கமாட்டார்கள் என சவால் விடுகின்றனர். திருடப்படும் மணல் பெரும்பாலும் மலைப்பகுதிகளில் அரசுத் துறைக்கு சொந்தமாக கட்டிடம் கட்டுதல் மற்றும் பாலம் கட்டுதல் பணிக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வின் ஆதரவோடு மணல் கடத்தப்படுவதால் பல தடுப்பணைகள் இருக்கும் சுவடு தெரியாமல் காணாமல் போய்விடும். எனவே, உடனடியாக மாவட்ட நிர்வாகம் மணல் கடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றனர்.



Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...