கோவை: கோவையில் இன்று நடைபெற இருந்த பொது சுகாதாரத் துறை கூட்டுறவு சங்க தேர்தல் திடீரென ரத்து செய்யப்பட்டதால், வாக்களிக்க வந்த ஊழியர்கள் ஏமாற்றமடைந்தனர்.
கோவை: கோவையில் இன்று நடைபெற இருந்த பொது சுகாதாரத் துறை கூட்டுறவு சங்க தேர்தல் திடீரென ரத்து செய்யப்பட்டதால், வாக்களிக்க வந்த ஊழியர்கள் ஏமாற்றமடைந்தனர்.
பொது சுகாதாரத் துறை பணியாளர் கூட்டுறவுக்கான சிக்கண மற்றும் நாணய சங்க தேர்தல் கோவையில் இன்று நடைபெற இருந்தது. நிர்வாக குழு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் 23 பேர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் வாக்களிக்க 350-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த நிலையில், தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வேட்பாளர்கள், வாக்காளர்கள் வந்த நிலையில் தீடீரென தேர்தல் நிறுத்தி வைக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் தேர்தல் ரத்து செய்வதாக தேர்தல் அதிகாரி சார்பில் ஒட்டப்பட்ட நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் தலையீடு காரணமாக இந்த தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கும் ஊழியர்கள், தேர்தலை அறிவித்தபடி நடத்த வேண்டும் என்று உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளதாக சுகாதாரத் துறை பணியாளர்கள் தெரிவித்தனர்.
பொது சுகாதாரத் துறை பணியாளர் கூட்டுறவுக்கான சிக்கண மற்றும் நாணய சங்க தேர்தல் கோவையில் இன்று நடைபெற இருந்தது. நிர்வாக குழு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் 23 பேர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் வாக்களிக்க 350-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த நிலையில், தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வேட்பாளர்கள், வாக்காளர்கள் வந்த நிலையில் தீடீரென தேர்தல் நிறுத்தி வைக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் தேர்தல் ரத்து செய்வதாக தேர்தல் அதிகாரி சார்பில் ஒட்டப்பட்ட நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் தலையீடு காரணமாக இந்த தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கும் ஊழியர்கள், தேர்தலை அறிவித்தபடி நடத்த வேண்டும் என்று உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளதாக சுகாதாரத் துறை பணியாளர்கள் தெரிவித்தனர்.