சுகாதாரத் துறை கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து: வாக்களிக்க வந்தவர்கள் ஏமாற்றம்

கோவை: கோவையில் இன்று நடைபெற இருந்த பொது சுகாதாரத் துறை கூட்டுறவு சங்க தேர்தல் திடீரென ரத்து செய்யப்பட்டதால், வாக்களிக்க வந்த ஊழியர்கள் ஏமாற்றமடைந்தனர்.

கோவை: கோவையில் இன்று நடைபெற இருந்த பொது சுகாதாரத் துறை கூட்டுறவு சங்க தேர்தல் திடீரென ரத்து செய்யப்பட்டதால், வாக்களிக்க வந்த ஊழியர்கள் ஏமாற்றமடைந்தனர்.

பொது சுகாதாரத் துறை பணியாளர் கூட்டுறவுக்கான சிக்கண மற்றும் நாணய சங்க தேர்தல் கோவையில் இன்று நடைபெற இருந்தது. நிர்வாக குழு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் 23 பேர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் வாக்களிக்க 350-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த நிலையில், தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வேட்பாளர்கள், வாக்காளர்கள் வந்த நிலையில் தீடீரென தேர்தல் நிறுத்தி வைக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் தேர்தல் ரத்து செய்வதாக தேர்தல் அதிகாரி சார்பில் ஒட்டப்பட்ட நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் தலையீடு காரணமாக இந்த தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கும் ஊழியர்கள், தேர்தலை அறிவித்தபடி நடத்த வேண்டும் என்று உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளதாக சுகாதாரத் துறை பணியாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...