சுகாதாரத் துறை கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து: வாக்களிக்க வந்தவர்கள் ஏமாற்றம்

கோவை: கோவையில் இன்று நடைபெற இருந்த பொது சுகாதாரத் துறை கூட்டுறவு சங்க தேர்தல் திடீரென ரத்து செய்யப்பட்டதால், வாக்களிக்க வந்த ஊழியர்கள் ஏமாற்றமடைந்தனர்.

கோவை: கோவையில் இன்று நடைபெற இருந்த பொது சுகாதாரத் துறை கூட்டுறவு சங்க தேர்தல் திடீரென ரத்து செய்யப்பட்டதால், வாக்களிக்க வந்த ஊழியர்கள் ஏமாற்றமடைந்தனர்.

பொது சுகாதாரத் துறை பணியாளர் கூட்டுறவுக்கான சிக்கண மற்றும் நாணய சங்க தேர்தல் கோவையில் இன்று நடைபெற இருந்தது. நிர்வாக குழு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் 23 பேர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் வாக்களிக்க 350-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த நிலையில், தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வேட்பாளர்கள், வாக்காளர்கள் வந்த நிலையில் தீடீரென தேர்தல் நிறுத்தி வைக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் தேர்தல் ரத்து செய்வதாக தேர்தல் அதிகாரி சார்பில் ஒட்டப்பட்ட நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் தலையீடு காரணமாக இந்த தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கும் ஊழியர்கள், தேர்தலை அறிவித்தபடி நடத்த வேண்டும் என்று உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளதாக சுகாதாரத் துறை பணியாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...