ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு: கோவை இளைஞர்கள் பைக் பேரணி

கோவை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையைச் சேர்ந்த இளைஞர்கள் தூத்துக்குடி வரை பைக் பேரணி செல்கின்றனர்.


கோவை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையைச் சேர்ந்த இளைஞர்கள் தூத்துக்குடி வரை பைக் பேரணி செல்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளிவரும் நச்சுப்புகையால் அப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு பல்வேறு நோய்கள் வருவதோடு, சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்படுவதாகக் கூறி கடந்த 54 நாட்களாக பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் கோவை பைக்கர்ஸ் கிளப்பைச் சேர்ந்த கவிசன், அமின், விக்னேஸ் ஆகிய மூன்று இளைஞர்கள் கோவையிலிருந்து தூத்துக்குடி வரை சென்று மீண்டும் கோவை வரையிலும் பேரணி செல்ல திட்டமிட்டனர். 

அதன்படி, தங்களது இருசக்கர வாகனத்தில் இன்று கோவையிலிருந்து தூத்துக்குடி கிளம்பினர்.

இவர்களது பேரணிகளுக்கு பல இளைஞர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, விக்னேஸ் கூறுகையில், "ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் இளைஞர்கள் அதிகளவு பங்கேற்க வேண்டும். ஒரு பிரச்சனை வரும் போது முந்தைய பிரச்சனைகளை நாம் மறந்து விடுகிறோம். ஸ்டெர்லைட் வந்த பின் நியூட்ரினோ திட்டத்திற்கான எதிர்ப்பை மறந்துவிட்டோம். காவிரி பிரச்சனை வந்தவுடன் ஸ்டெர்லைட் பிரச்சனை மறந்து விட்டோம்.

மக்கள் பிரச்சனைக்கு நாம் அனைவரும் தொடர்ந்து போராட வேண்டும். அரசால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றால் மெரினாவில் போடப்பட்ட 144 தடை உத்தரவை திரும்ப பெறவேண்டும். அப்போது, இளைஞர்களே போராடி ஸ்டெர்லைட்டை மூட வைப்போம்." என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...