கோவை : கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் மணல் திருடியவருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.
கோவை : கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் மணல் திருடியவருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.
இது தொடர்பாக கோவை மாவட்ட வன அலுவலர் சதீஸ் கூறுகையில், "கொடுங்கரைப்பாளையம் வனப்பகுதிக்குள் ஒரு மினி லாரி நின்று கொண்டிருந்தது. அந்த வாகனத்தை சோதனையிட்ட போது அதில் மணல் திருட்டு நடைபெறுவது தெரியவந்தது.
இது தொடர்பாக, அந்த லாரியின் ஓட்டுநர் சதீஸ் குமார் (34) என்பவரை பிடித்து விசாரித்தபோது ஆனைகட்டியில் இருந்து மணல் திருடி வருவது தெரியவந்தது. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது." என்றார்.
இது தொடர்பாக கோவை மாவட்ட வன அலுவலர் சதீஸ் கூறுகையில், "கொடுங்கரைப்பாளையம் வனப்பகுதிக்குள் ஒரு மினி லாரி நின்று கொண்டிருந்தது. அந்த வாகனத்தை சோதனையிட்ட போது அதில் மணல் திருட்டு நடைபெறுவது தெரியவந்தது.
இது தொடர்பாக, அந்த லாரியின் ஓட்டுநர் சதீஸ் குமார் (34) என்பவரை பிடித்து விசாரித்தபோது ஆனைகட்டியில் இருந்து மணல் திருடி வருவது தெரியவந்தது. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது." என்றார்.