கோவை : ரயில் தண்டவாளங்கள் புனரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் ஈரோடு - கோவை வழி ரயில்கள் இன்று தாமதமாக வந்தடையும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை : ரயில் தண்டவாளங்கள் புனரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் ஈரோடு - கோவை வழி ரயில்கள் இன்று தாமதமாக வந்தடையும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது :-
விஜயமங்கலம் மற்றும் ஊத்துக்குளி ரயில் நிலையங்களில் உள்ள தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், ஈரோடு முதல் கோவை வரையான பாதையை உபயோகிக்கும் சில ரயில்கள் தாமதமாக வந்தடையும். சில ரயில்கள் ரத்து செய்யப்படும்.
சேலம்-கோவை பயணிகள் ரயில் இன்றும், 25-ம் தேதியும் ரத்து செய்யப்படும். அதோடு, வரும் 20 மற்றும் 27-ம் தேதிகளில் 20 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்.
இதே போல் திருச்சி- பாலக்காடு, பிலாஸ்பூர்-திருநெல்வேலி, பிலாஸ்பூர்-எர்ணாகுளம், ஜெய்பூர்-கோவை ஆகிய ரயில்களின் நேரங்களிலும் சிறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது :-
விஜயமங்கலம் மற்றும் ஊத்துக்குளி ரயில் நிலையங்களில் உள்ள தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், ஈரோடு முதல் கோவை வரையான பாதையை உபயோகிக்கும் சில ரயில்கள் தாமதமாக வந்தடையும். சில ரயில்கள் ரத்து செய்யப்படும்.
சேலம்-கோவை பயணிகள் ரயில் இன்றும், 25-ம் தேதியும் ரத்து செய்யப்படும். அதோடு, வரும் 20 மற்றும் 27-ம் தேதிகளில் 20 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்.
இதே போல் திருச்சி- பாலக்காடு, பிலாஸ்பூர்-திருநெல்வேலி, பிலாஸ்பூர்-எர்ணாகுளம், ஜெய்பூர்-கோவை ஆகிய ரயில்களின் நேரங்களிலும் சிறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.