தேசியக் கொடியை மிதித்து புகைப்படம் எடுத்த பொள்ளாச்சி வாலிபர் கைது

கோவை : இந்திய தேசியக் கொடியை காலில் மிதித்தபடி புகைப்படம் எடுத்து சமூக வளைதலங்களில் பதிவிட்ட இளைஞரை ஆனைமலை போலிசார் கைது செய்தனர்.


கோவை : இந்திய தேசியக் கொடியை காலில் மிதித்தபடி புகைப்படம் எடுத்து சமூக வளைதலங்களில் பதிவிட்ட இளைஞரை ஆனைமலை போலிசார் கைது செய்தனர்.



பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் வெற்றிவேல்(24). தமிழ்நாடு திராவிடர் கழகத்தின் உறுப்பினராக உள்ளார். காவிரி மேலாண்மை, நியூட்ரினோ திட்டம், ஸ்டெர்லைட் ஆலை போன்ற விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசின் மீது கோபம் கொண்ட இவர் கடந்த ஞாயிறன்று இந்திய தேசிய கொடியை காலில் மிதித்து புகைப்படம் எடுத்தார். அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். 

இந்த நிலையில், நேற்று மாலை கொடி அவமதிப்பு தொடர்பாக வெற்றிவேல் மீது ஆனைமலை போலிசார் தேசியக் கொடி அவமதிப்பு வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, அவரை பொள்ளாச்சி நீதித்துறை நடுவர் எண் 1 நீதிபதி முன்பு ஆஜர்படுத்திய போலீசார் வெற்றிவேலை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இது குறித்து தமிழ்நாடு திராவிடர் கழகத்தின் செய்தி தொடர்பாளர் பிரபாகரன் கூறுகையில், "தொடர்ச்சியாக இந்திய அரசு தமிழர்களை வஞ்சித்து வருகிறது. மக்களின் வாழ்வாதார கோரிக்கையை புறந்தள்ளிவிட்டு வாழ்வை அழிக்கும் ஆபத்தான திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வருகிறது. இதை அடிக்கடி ஆதங்கத்தோடு பேசி வந்த வெற்றிவேல் மன வெறுப்பில் இது போன்ற செயலில் ஈடுபட்டுவிட்டார்." என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...