வேட்புமனுவில் கைரேகை பெறும் போது ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்ததாக விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
வேட்புமனுவில் கைரேகை பெறும் போது ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்ததாக விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்புமனுவில் கைரேகை பெறும் போது ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்ததாக அரசு மருத்துவர் பாலாஜி விசாரணை ஆணையத்தில் குறுக்கு விசாரணையின் போது தெரிவித்துள்ளதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் இன்று தெரிவித்திருந்தார்.
அப்பல்லோவில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான தகவல்கள் 10-க்கும் மேற்பட்ட முறை ஓ.பன்னீர் செல்வத்திற்கு தெரிவிக்கப்பட்டதாகவும் பாலாஜி தெரிவித்ததாக செந்தூர்பாண்டியன் கூறினார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரிடமும் சிகிச்சை தகவல்களை பாலாஜி கூறியதாக அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை விசாரிக்க மனு தாக்கல் செய்வோம் எனவும் செந்தூர் பாண்டியன் கூறியுள்ளார்.
இந்நிலையில், ஜெயலலிதா கைரேகை வைக்கும் போது சுயநினைவுடன் இருந்ததாக விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்புமனுவில் கைரேகை பெறும் போது ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்ததாக அரசு மருத்துவர் பாலாஜி விசாரணை ஆணையத்தில் குறுக்கு விசாரணையின் போது தெரிவித்துள்ளதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் இன்று தெரிவித்திருந்தார்.
அப்பல்லோவில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான தகவல்கள் 10-க்கும் மேற்பட்ட முறை ஓ.பன்னீர் செல்வத்திற்கு தெரிவிக்கப்பட்டதாகவும் பாலாஜி தெரிவித்ததாக செந்தூர்பாண்டியன் கூறினார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரிடமும் சிகிச்சை தகவல்களை பாலாஜி கூறியதாக அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை விசாரிக்க மனு தாக்கல் செய்வோம் எனவும் செந்தூர் பாண்டியன் கூறியுள்ளார்.
இந்நிலையில், ஜெயலலிதா கைரேகை வைக்கும் போது சுயநினைவுடன் இருந்ததாக விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.