வால்பாறை பகுதியில் மழை : அருவிகளில் நீரை கண்ட சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

வால்பாறை : வால்பாறையில் கனமழை பெய்து வருவதால் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அங்கு சுற்றுலாப் சென்ற பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வால்பாறை : வால்பாறையில் கனமழை பெய்து வருவதால் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அங்கு சுற்றுலாப் சென்ற பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



கோடை சீசன் தொடங்கிவிட்ட காரணத்தால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும், கேரளா மற்றும் கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பிரதேசத்திற்கு சுற்றுலாப் செல்லத் தொடங்கியுள்ளனர். நிலவிவரும் கடும் வெப்பத்தில் இருந்து தப்பிப் பிழைத்தார் போல, சுற்றுலாப் பயணிகள் மலைப் பிரதேசங்களுக்கு சென்று இளைப்பாறி வருகின்றனர். 

அதோடு, கடந்த 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டதால் வால்பாறை மற்றும் உதகை பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்திருந்தது. குழு-குழுவென இருந்த வால்பாறையில் நேற்று லேசான மழை பெய்தது. கோடையின் தாக்கத்தை குறைக்கும் வகையில் பெய்த இந்த மழையால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். 



தொடர்ந்து, இன்றும் அப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் சாலையில் ஆங்காங்கே உள்ள சிறு அருவிகளில், நீர் வழிந்தோடத் தொடங்கியுள்ளது. இது அங்கு சுற்றுலாப் சென்ற பயணிகளை குதூகலமடையச் செய்துள்ளது. தற்போது அந்த அருவிகளில் வழிந்தோடும் நீரில் விளையாடி இன்பச் சுற்றுலாவாக கொண்டாடி வருகின்றனர் சுற்றுலாப் பயணிகள். 

Newsletter

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...