பாலேஸ்வரம் கருணை இல்ல விவகாரம்: 282 பேரையும் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம் பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இருந்து அழைத்துச்சென்ற 282 பேரை இன்றைக்குள் மீண்டும் அதே இல்லத்தில் ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

காஞ்சிபுரம் பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இருந்து அழைத்துச்சென்ற 282 பேரை இன்றைக்குள் மீண்டும் அதே இல்லத்தில் ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

காஞ்சிபுரம் பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் மாவட்ட வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி அங்குள்ளவர்களை மீட்டு அரசு பொறுப்பில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளனர். மேலும், இந்தக் கருணை இல்லத்துக்கான காப்பக உரிமம் முடிந்துவிட்ட நிலையில், தற்போது வரை உரிமம் இல்லாமல் இயங்கிவருவது கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பாலேஸ்வரம் கருணை இல்லத்திலிருந்து தமிழக அரசு அழைத்துச் சென்ற 282 பேரையும் இன்றைக்குள் அங்கு ஒப்படைக்க வேண்டும் என வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர்களை தமிழக அரசு மீண்டும் பாலேஸ்வரம் கருணை இல்லத்திற்கு அழைத்துச் செல்லவும் உத்தரவிட்டுள்ளது. இதற்கு அரசு தரப்பில் பாலேஸ்வரம் இல்லத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட 294 பேரில் 12 பேர் இறந்துவிட்டனர். அதில் 282 பேர் பல இல்லங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் அறிக்கை தாக்கல் செய்திருந்தது.

பாலேஸ்வரம் கருணை இல்ல நிர்வாக இயக்குநர் தாமஸ் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனு மீது உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...