பாலேஸ்வரம் கருணை இல்ல விவகாரம்: 282 பேரையும் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம் பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இருந்து அழைத்துச்சென்ற 282 பேரை இன்றைக்குள் மீண்டும் அதே இல்லத்தில் ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

காஞ்சிபுரம் பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இருந்து அழைத்துச்சென்ற 282 பேரை இன்றைக்குள் மீண்டும் அதே இல்லத்தில் ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

காஞ்சிபுரம் பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் மாவட்ட வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி அங்குள்ளவர்களை மீட்டு அரசு பொறுப்பில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளனர். மேலும், இந்தக் கருணை இல்லத்துக்கான காப்பக உரிமம் முடிந்துவிட்ட நிலையில், தற்போது வரை உரிமம் இல்லாமல் இயங்கிவருவது கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பாலேஸ்வரம் கருணை இல்லத்திலிருந்து தமிழக அரசு அழைத்துச் சென்ற 282 பேரையும் இன்றைக்குள் அங்கு ஒப்படைக்க வேண்டும் என வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர்களை தமிழக அரசு மீண்டும் பாலேஸ்வரம் கருணை இல்லத்திற்கு அழைத்துச் செல்லவும் உத்தரவிட்டுள்ளது. இதற்கு அரசு தரப்பில் பாலேஸ்வரம் இல்லத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட 294 பேரில் 12 பேர் இறந்துவிட்டனர். அதில் 282 பேர் பல இல்லங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் அறிக்கை தாக்கல் செய்திருந்தது.

பாலேஸ்வரம் கருணை இல்ல நிர்வாக இயக்குநர் தாமஸ் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனு மீது உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...