'பா.ஜ.க வினர் அவதூறாக பேசுகின்றனர்' : தி.மு.க. மகளிர் அணியினர் கோவையில் புகார்

தி.மு.க. மகளிர் அணியினை சேர்ந்தவர்களை சமூக வலைத்தளங்களில் பா.ஜ.க.வினர் அவதூறாக பேசுவதாக கூறி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி கோவை மாநகர காவல் ஆணையரிடத்தில் இன்று தி.மு.க.வினர் புகார் மனு அளித்தனர்


கோவை: தி.மு.க. மகளிர் அணியினை சேர்ந்தவர்களை சமூக வலைத்தளங்களில் பா.ஜ.க.வினர் அவதூறாக பேசுவதாக கூறி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி கோவை மாநகர காவல் ஆணையரிடத்தில் இன்று தி.மு.க.வினர் புகார் மனு அளித்தனர்.



கடந்த 21-ம் தேதி பாரதிய ஜனதா கட்சி சார்பாக தமிழ்நாட்டிற்குள் ரத ஊர்வலம் வருவதை எதிர்த்து போராடிய தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல்களில் ஈடுபட்டனர். 

கோவை மாவட்டத்தில் தி.மு.க. மகளிர் அணியினர் போராட்டத்தோடு, அந்த புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டனர். இதற்கு பா.ஜ.க.வைச் சேர்ந்த ரமா, ஜெகதீசன் என்ற இருவரும் புகைப்படத்தில் இருந்த பெண்களை  விமர்சித்துள்ளனர். இதையடுத்து பெண்களை அவதூறாக விமர்சணம்  செய்த இருவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தி.மு.க. மகளிர் அணியினர் இன்று கோவை மாநகர ஆணையரிடம் புகார் அளித்தனர், முகநூலில் அவதூறாக பதிவிட்டிருக்கும் நகலையும் இணைத்து கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யாவிடம் புகார் அளித்துள்ளனர்.



தொடர்ந்து, அக்கட்சி மகளிர் அணியின் மாநில துணை செயலாளர் மீனா லோகநாதன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஸ்டாலின் அவர்கள் சென்னையில் கைது செய்யப்பட்டதை கண்டித்து எங்களது மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி காவல் துறையால் கைது செய்யப்பட்டனர். அந்த புகைப்படத்தை எனது பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தேன். அதற்கு பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த ரமா என்ற பெயரில் உள்ள நபர் மிகவும் தரம் தாழ்த்தி விமர்சனங்களை பதிவிட்டுள்ளார். இது போராட்டங்களில் கலந்து கொள்ளும் பெண்களை இழிவுபடுத்தியுள்ளது. இதனால் ரமா மற்றும் ஜெகன் குமார் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...