கோவையில் அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்த மூவர் கைது : பொதுமக்கள் சாலை மறியல்

கோவை அம்மன் குளம் பகுதியில் அனுமதி இன்றி விநாயகர் சிலையை வைத்த மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்ததை கண்டித்து அவர்களது உறவினர்கள் இராமநாதபுரம் காவல் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.


கோவை : கோவை அம்மன் குளம் பகுதியில் அனுமதி இன்றி விநாயகர் சிலையை வைத்த மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்ததை கண்டித்து அவர்களது உறவினர்கள் இராமநாதபுரம் காவல் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.



அம்மன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (32), இவர தனது நண்பர்களான பிரகாஷ் (34), பத்ரன் (28) ஆகிய இருவருடன் சேர்ந்து கிட்னி சென்டர் பகுதியில் உள்ள ஹவுசிங் யூனிட் அருகில் அனுமதி இன்றி விநாயகர் சிலையை வைத்தார். இதைத்தொடர்ந்து, தாசில்தார் அனுமதி இன்றி சிலை வைத்ததாகக் கூறி அதனை அகற்ற அப்பகுதி இளைஞர்களை வலியுறுத்தினார். ஆனால், சிலை வைத்த மூவரும் அதனை எடுக்க மறுத்தனர். இதைத் தொடர்ந்து, அப்பகுதி இளைஞர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 



இந்த நிலையில், தாசில்தார் இராமநாதபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிலை வைத்த மூவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய கோரி அவர்களது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இராமநாதபுரம் காவல் நிலையம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...