கோவை இருகூர் பகுதி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3 சவரன் நகை மற்றும் ரூ. 25,000 ரொக்கம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.
கோவை: கோவை இருகூர் பகுதி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3 சவரன் நகை மற்றும் ரூ. 25,000 ரொக்கம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.
இருகூரில் உள்ள பழனிமலை தேவர் வீதியில் வசித்து வருபவர் தனபாலின் மகன் தியாகராஜன் (29). இவர் கடந்த 8ம் தேதி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர், இன்று காலை இருகூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்த அவர் கதவு உடைக்கபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது 3 பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் பணம் கொள்ளை போனது தெரியவந்துள்ளது.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், தகவலறிந்து வந்த போலீசார் தடயவியல் நிபுணர்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும், இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கோவையில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் மற்றும் சங்கிலி பறிப்பு குற்றங்கள் நடைபெறுவதால் கோவை மாநகரில் போலீசார் வாகன தணிக்கை மூலம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இருகூரில் உள்ள பழனிமலை தேவர் வீதியில் வசித்து வருபவர் தனபாலின் மகன் தியாகராஜன் (29). இவர் கடந்த 8ம் தேதி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர், இன்று காலை இருகூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்த அவர் கதவு உடைக்கபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது 3 பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் பணம் கொள்ளை போனது தெரியவந்துள்ளது.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், தகவலறிந்து வந்த போலீசார் தடயவியல் நிபுணர்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும், இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கோவையில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் மற்றும் சங்கிலி பறிப்பு குற்றங்கள் நடைபெறுவதால் கோவை மாநகரில் போலீசார் வாகன தணிக்கை மூலம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.