வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை

கோவை இருகூர் பகுதி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3 சவரன் நகை மற்றும் ரூ. 25,000 ரொக்கம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.

கோவை: கோவை இருகூர் பகுதி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3 சவரன் நகை மற்றும் ரூ. 25,000 ரொக்கம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.

இருகூரில் உள்ள பழனிமலை தேவர் வீதியில் வசித்து வருபவர் தனபாலின் மகன் தியாகராஜன் (29). இவர் கடந்த 8ம் தேதி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர், இன்று காலை இருகூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்த அவர் கதவு உடைக்கபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது 3 பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் பணம் கொள்ளை போனது தெரியவந்துள்ளது.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், தகவலறிந்து வந்த போலீசார் தடயவியல் நிபுணர்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும், இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கோவையில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் மற்றும் சங்கிலி பறிப்பு குற்றங்கள் நடைபெறுவதால் கோவை மாநகரில் போலீசார் வாகன தணிக்கை மூலம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...