கோவையில் உள்ள தமிழக வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாநாட்டை பல்கலைக்கழக துணைவேந்தர் கு. இராமசாமி இன்று துவக்கி வைத்தார்.
கோவை : கோவையில் உள்ள தமிழக வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாநாட்டை பல்கலைக்கழக துணைவேந்தர் கு. இராமசாமி இன்று துவக்கி வைத்தார்.

இவ்விழாவில் சென்னை நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர் எஸ்.என்.ஏ. ஜின்னா, மத்திய திட்டக்குழுவின் முன்னாள் வேளாண் ஆலோசகர் வி.வி. சதாமத்தே ஆகியோரும் இந்தத் துவக்க விழாவில் பங்கேற்றனர். இம்மாநாட்டில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விரிவாக்க விஞ்ஞானிகள், அதிகாரிகள், ஆராய்ச்சி மாணவர்கள் சுமார் 300 பேர் கலந்து கொண்டுள்ளனர். பல்கலைக்கழக துணைவேந்தர் கு. இராமசாமி தனது துவக்க உரையில், குறைந்துவரும் சாகுபடி பரப்பு, வேலையாட்கள் பற்றாக்குறை மற்றும் நீர் பாசனப் பற்றாக்குறை ஆகிய பிரச்சனைகளுக்கிடையே உணவு உற்பத்தியை உயர்த்திய பெருமையில் வேளாண் விரிவாக்க விஞ்ஞானிகள் வேளாண் விரிவாக்க அலுவலர்களின் பங்களிப்பை பாராட்டிப் பேசினார்.
மேலும், நமது வேளாண் விரிவாக்க அணுகுமுறைகள் அரசு மற்றும் தனியார் அமைப்புகளை ஒருங்கிணைந்து செயல்படும் வகையிலும், தேசிய மற்றும் உள்ளூர் சந்தைகளை ஒருங்கிணைக்கும் வகையிலும் செயல்பட வேண்டும் என்றும், விவசாயிகள் கடன் பெறுவது மற்றும் உபயோகித்தல் ஆகியவற்றை ஆய்வு செய்வதன் அவசியத்தைப் பற்றியும் குறிப்பிட்டார். வறட்சிக்கு இலக்காகும் பகுதிகளில் அந்தந்தப் பகுதிகளுக்கேற்ற மாற்றுப் பயிர்கள் பற்றிய பரிந்துரைகளை பொதுவாகக் குறிப்பிடாமல் துல்லிய பரிந்துரைகளாக வழங்கமாறு கேட்டுக்கொண்டார்.
அடுத்தாகப் பேசிய சென்னை நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர் எஸ்.என்.ஏ. ஜின்னா, நமது வேளாண் விhpவாக்க அணுகுமுறைகள் தற்போது பெரிய மாற்றங்களைச் சந்தித்து வருவதாக எடுத்துரைத்தார்.

இவ்விழாவில் சென்னை நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர் எஸ்.என்.ஏ. ஜின்னா, மத்திய திட்டக்குழுவின் முன்னாள் வேளாண் ஆலோசகர் வி.வி. சதாமத்தே ஆகியோரும் இந்தத் துவக்க விழாவில் பங்கேற்றனர். இம்மாநாட்டில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விரிவாக்க விஞ்ஞானிகள், அதிகாரிகள், ஆராய்ச்சி மாணவர்கள் சுமார் 300 பேர் கலந்து கொண்டுள்ளனர். பல்கலைக்கழக துணைவேந்தர் கு. இராமசாமி தனது துவக்க உரையில், குறைந்துவரும் சாகுபடி பரப்பு, வேலையாட்கள் பற்றாக்குறை மற்றும் நீர் பாசனப் பற்றாக்குறை ஆகிய பிரச்சனைகளுக்கிடையே உணவு உற்பத்தியை உயர்த்திய பெருமையில் வேளாண் விரிவாக்க விஞ்ஞானிகள் வேளாண் விரிவாக்க அலுவலர்களின் பங்களிப்பை பாராட்டிப் பேசினார்.
மேலும், நமது வேளாண் விரிவாக்க அணுகுமுறைகள் அரசு மற்றும் தனியார் அமைப்புகளை ஒருங்கிணைந்து செயல்படும் வகையிலும், தேசிய மற்றும் உள்ளூர் சந்தைகளை ஒருங்கிணைக்கும் வகையிலும் செயல்பட வேண்டும் என்றும், விவசாயிகள் கடன் பெறுவது மற்றும் உபயோகித்தல் ஆகியவற்றை ஆய்வு செய்வதன் அவசியத்தைப் பற்றியும் குறிப்பிட்டார். வறட்சிக்கு இலக்காகும் பகுதிகளில் அந்தந்தப் பகுதிகளுக்கேற்ற மாற்றுப் பயிர்கள் பற்றிய பரிந்துரைகளை பொதுவாகக் குறிப்பிடாமல் துல்லிய பரிந்துரைகளாக வழங்கமாறு கேட்டுக்கொண்டார்.
அடுத்தாகப் பேசிய சென்னை நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர் எஸ்.என்.ஏ. ஜின்னா, நமது வேளாண் விhpவாக்க அணுகுமுறைகள் தற்போது பெரிய மாற்றங்களைச் சந்தித்து வருவதாக எடுத்துரைத்தார்.