வேளாண் பல்கலையில் 2 நாள் சர்வதேச விரிவாக்க மாநாடு இன்று தொடக்கம்

கோவையில் உள்ள தமிழக வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாநாட்டை பல்கலைக்கழக துணைவேந்தர் கு. இராமசாமி இன்று துவக்கி வைத்தார்.

கோவை : கோவையில் உள்ள தமிழக வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாநாட்டை பல்கலைக்கழக துணைவேந்தர் கு. இராமசாமி இன்று துவக்கி வைத்தார். 



இவ்விழாவில் சென்னை நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர் எஸ்.என்.ஏ. ஜின்னா, மத்திய திட்டக்குழுவின் முன்னாள் வேளாண் ஆலோசகர்  வி.வி. சதாமத்தே ஆகியோரும் இந்தத் துவக்க விழாவில் பங்கேற்றனர். இம்மாநாட்டில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விரிவாக்க விஞ்ஞானிகள், அதிகாரிகள், ஆராய்ச்சி மாணவர்கள் சுமார் 300 பேர் கலந்து கொண்டுள்ளனர். பல்கலைக்கழக துணைவேந்தர் கு. இராமசாமி தனது துவக்க உரையில், குறைந்துவரும் சாகுபடி பரப்பு, வேலையாட்கள் பற்றாக்குறை மற்றும் நீர் பாசனப் பற்றாக்குறை ஆகிய பிரச்சனைகளுக்கிடையே உணவு உற்பத்தியை உயர்த்திய பெருமையில் வேளாண் விரிவாக்க விஞ்ஞானிகள் வேளாண் விரிவாக்க அலுவலர்களின் பங்களிப்பை பாராட்டிப் பேசினார்.

மேலும், நமது வேளாண் விரிவாக்க அணுகுமுறைகள் அரசு மற்றும் தனியார் அமைப்புகளை ஒருங்கிணைந்து செயல்படும் வகையிலும், தேசிய மற்றும் உள்ளூர் சந்தைகளை ஒருங்கிணைக்கும் வகையிலும் செயல்பட வேண்டும் என்றும், விவசாயிகள் கடன் பெறுவது மற்றும் உபயோகித்தல் ஆகியவற்றை ஆய்வு செய்வதன் அவசியத்தைப் பற்றியும் குறிப்பிட்டார். வறட்சிக்கு இலக்காகும் பகுதிகளில் அந்தந்தப் பகுதிகளுக்கேற்ற மாற்றுப் பயிர்கள் பற்றிய பரிந்துரைகளை பொதுவாகக் குறிப்பிடாமல் துல்லிய பரிந்துரைகளாக வழங்கமாறு கேட்டுக்கொண்டார்.

அடுத்தாகப் பேசிய சென்னை நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர் எஸ்.என்.ஏ. ஜின்னா, நமது வேளாண் விhpவாக்க அணுகுமுறைகள் தற்போது பெரிய மாற்றங்களைச் சந்தித்து வருவதாக எடுத்துரைத்தார். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...