சென்னையில் ஒருதலை காதலால், கல்லூரி வாயிலில் மாணவி ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ஒருதலை காதலால், கல்லூரி வாயிலில் மாணவி ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கே.கே.நகரில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. இந்தக் கல்லூரியில் அஸ்வினி என்ற மாணவி பயின்று வந்தார். இன்று மதியம் 3 மணி அளவில் கல்லூரி முடிந்தவுடன் வெளியே வந்துள்ளார். அப்போது, இளைஞர் ஒருவர் மாணவியை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியை சரமாரியாக குத்தியுள்ளார். இதைப்பார்த்து அக்கம், பக்கம் உள்ளவர்கள் தடுக்க முயன்றும் சரமாரியாக குத்தியதில், ரத்தவெள்ளத்தில் மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாணவியைக் கத்தியால் குத்திய இளைஞர் தப்பி ஓடமுயன்றார். இதனைக் கண்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த இளைஞரைப் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில், பலத்த காயமடைந்த அவர் அங்கேயே மயங்கி விழுந்தார்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கொலை செய்தவர் செஞ்சியைச் சேர்ந்த அழகேசன் என்பதும், சுகாதார துறையில் பணிபுரிந்து வரும் அவர் மதுரவாயல் பகுதியில் வசித்து வந்ததும் தெரியவந்தது. மேலும், அஸ்வினி அளித்த புகாரின் பேரில் அழகேசனை போலீசார் கைது செய்யப்பட்டதாகவும், இதனால், ஆத்திரமடைந்த அழகேசன் கொலை செய்ததாகத் தெரியவந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. காதல் விவகாரத்தில் இந்தக் கொலை நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், சிசிடிவி காட்சிகள் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, மாணவி அஸ்வினி கொலை செய்யப்பட்டது தொடர்பாக எழும்பூர் வட்டாட்சியர் விசாரணை நடத்தி, அறிக்கை தந்தபின் அரசிடம் சமர்பிக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
சென்னை கே.கே.நகரில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. இந்தக் கல்லூரியில் அஸ்வினி என்ற மாணவி பயின்று வந்தார். இன்று மதியம் 3 மணி அளவில் கல்லூரி முடிந்தவுடன் வெளியே வந்துள்ளார். அப்போது, இளைஞர் ஒருவர் மாணவியை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியை சரமாரியாக குத்தியுள்ளார். இதைப்பார்த்து அக்கம், பக்கம் உள்ளவர்கள் தடுக்க முயன்றும் சரமாரியாக குத்தியதில், ரத்தவெள்ளத்தில் மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாணவியைக் கத்தியால் குத்திய இளைஞர் தப்பி ஓடமுயன்றார். இதனைக் கண்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த இளைஞரைப் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில், பலத்த காயமடைந்த அவர் அங்கேயே மயங்கி விழுந்தார்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கொலை செய்தவர் செஞ்சியைச் சேர்ந்த அழகேசன் என்பதும், சுகாதார துறையில் பணிபுரிந்து வரும் அவர் மதுரவாயல் பகுதியில் வசித்து வந்ததும் தெரியவந்தது. மேலும், அஸ்வினி அளித்த புகாரின் பேரில் அழகேசனை போலீசார் கைது செய்யப்பட்டதாகவும், இதனால், ஆத்திரமடைந்த அழகேசன் கொலை செய்ததாகத் தெரியவந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. காதல் விவகாரத்தில் இந்தக் கொலை நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், சிசிடிவி காட்சிகள் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, மாணவி அஸ்வினி கொலை செய்யப்பட்டது தொடர்பாக எழும்பூர் வட்டாட்சியர் விசாரணை நடத்தி, அறிக்கை தந்தபின் அரசிடம் சமர்பிக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.