அ.தி.மு.க. அம்மா அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து, டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் பட்டாசுளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.
திருப்பூர்: அ.தி.மு.க. அம்மா அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து, டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் பட்டாசுளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.

அ.தி.மு.க. அம்மா அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை, திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அம்மா அணியின் சார்பில், பார்க் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். முழு உருவசிலைக்கு மாவட்ட கழக செயலாளர் சி. சிவசாமி தலைமையில் ஏராளமான கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், கழக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி உற்சாகமாகக் கொண்டாடினர்.
இதேபோல, பல்லடம், அவிநாசி, அன்னூர் உட்பட பல்வேறு பகுதிகளில் கழக தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடினார்கள். இந்த உற்சாகமான கொண்டாட்டத்தில் மாவட்ட கழக இணை செயலாளர் ஜோதிமணி, மாவட்ட பாசறை செயலாளர் சதீஷ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் டி. பார்த்திபன், களஞ்சியம் பொன்னுசாமி, சூர்யா, செந்தில் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க. அம்மா அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை, திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அம்மா அணியின் சார்பில், பார்க் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். முழு உருவசிலைக்கு மாவட்ட கழக செயலாளர் சி. சிவசாமி தலைமையில் ஏராளமான கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், கழக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி உற்சாகமாகக் கொண்டாடினர்.
இதேபோல, பல்லடம், அவிநாசி, அன்னூர் உட்பட பல்வேறு பகுதிகளில் கழக தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடினார்கள். இந்த உற்சாகமான கொண்டாட்டத்தில் மாவட்ட கழக இணை செயலாளர் ஜோதிமணி, மாவட்ட பாசறை செயலாளர் சதீஷ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் டி. பார்த்திபன், களஞ்சியம் பொன்னுசாமி, சூர்யா, செந்தில் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.