அரசின் சார்பில் உண்டு, உறைவிடப் பள்ளி மாணவர்களுக்கு ஒருநாள் விழிப்புணர்வு சுற்றுலா

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் பின்தங்கிய பழங்குடியினருக்கான உண்டு, உறைவிடப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா இன்று உதகை அரசு தாவரவியல் பூங்காவில் தொடங்கியது.

நீலகிரி: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் பின்தங்கிய பழங்குடியினருக்கான உண்டு, உறைவிடப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா இன்று உதகை அரசு தாவரவியல் பூங்காவில் தொடங்கியது. 



நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்த இந்த சுற்றுலா பயணத்தில் கரிக்கையூர், குஞ்சப்பண்ணை, புத்தூர் வயல், பொண்ணூர், நடுவட்டம், கார்குடி உண்டு உறைவிட பள்ளிகளில் படிக்கும் 150 மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர். பின்தங்கிய பகுதிகளில் வாழும் இந்த மாணவர்களுக்கு இயற்கையைப் பாதுகாப்பது, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது, சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைப்பது மற்றும் கழிவறைகளை பயன்படுத்துவது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.

இந்த ஒருநாள் சுற்றுலாவின் போது உதகையிலுள்ள அருங்காட்சியகம், ஆளுநர் மாளிகை, தாவரவியல் பூங்கா, பழமை வாய்ந்த கட்டிடங்கள் மற்றும் வானியல் ஆராய்ச்சி மையத்தைப் பார்வையிட உள்ளனர். இதுபோன்ற திட்டங்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்படுவதாகவும், நீலகிரி மாவட்டத்திற்காக ரூ. 2 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் முரளி தெரிவித்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...