இந்து அறநிலையத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

திருப்பூரில் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் அறநிலையத்துறை அலுவலத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்: திருப்பூரில் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் அறநிலையத்துறை அலுவலத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 



திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட கே.வி.ஆர். நகர் மற்றும் செல்லம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆண்டுகளாக குடியிருந்து வரும் பொதுமக்களின் குடியிருப்புகள் அறநிலையத்துறைக்கு சொந்தமானது எனவும், ஆக்கிரமிப்பில் உள்ளவர்கள் உடனடியாக காலி செய்யவேண்டும் எனக் கூறி இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் தலைமையில் பொதுமக்கள் அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். 

அப்போது, தாங்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக அந்தப் பகுதிகளில் குடியிருந்து வருவதாகவும், தற்போது அறநிலையத்துறை நடவடிக்கையால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, இடத்தை தங்களுக்கே கிரயம் செய்து வைக்குமாறு அவர்கள் அரசுக்குக் கோரிக்கையையும் விடுத்தனர். பொதுமக்களுடன் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...