திருப்பூரில் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் அறநிலையத்துறை அலுவலத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்: திருப்பூரில் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் அறநிலையத்துறை அலுவலத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட கே.வி.ஆர். நகர் மற்றும் செல்லம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆண்டுகளாக குடியிருந்து வரும் பொதுமக்களின் குடியிருப்புகள் அறநிலையத்துறைக்கு சொந்தமானது எனவும், ஆக்கிரமிப்பில் உள்ளவர்கள் உடனடியாக காலி செய்யவேண்டும் எனக் கூறி இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் தலைமையில் பொதுமக்கள் அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
அப்போது, தாங்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக அந்தப் பகுதிகளில் குடியிருந்து வருவதாகவும், தற்போது அறநிலையத்துறை நடவடிக்கையால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, இடத்தை தங்களுக்கே கிரயம் செய்து வைக்குமாறு அவர்கள் அரசுக்குக் கோரிக்கையையும் விடுத்தனர். பொதுமக்களுடன் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட கே.வி.ஆர். நகர் மற்றும் செல்லம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆண்டுகளாக குடியிருந்து வரும் பொதுமக்களின் குடியிருப்புகள் அறநிலையத்துறைக்கு சொந்தமானது எனவும், ஆக்கிரமிப்பில் உள்ளவர்கள் உடனடியாக காலி செய்யவேண்டும் எனக் கூறி இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் தலைமையில் பொதுமக்கள் அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
அப்போது, தாங்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக அந்தப் பகுதிகளில் குடியிருந்து வருவதாகவும், தற்போது அறநிலையத்துறை நடவடிக்கையால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, இடத்தை தங்களுக்கே கிரயம் செய்து வைக்குமாறு அவர்கள் அரசுக்குக் கோரிக்கையையும் விடுத்தனர். பொதுமக்களுடன் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.