தமிழகம் முழுவதும் போராட்டம் தொடரும்: மாணவர்கள் எச்சரிக்கை

திரிபுராவில் லெனின் சிலை இடிக்கப்பட்டதைக் கண்டித்தும், தமிழகத்தில் பெரியார் சிலை இடிக்கப்படும், என்ற பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜாவைக் கண்டித்தும் தஞ்சையில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்: திரிபுராவில் லெனின் சிலை இடிக்கப்பட்டதைக் கண்டித்தும், தமிழகத்தில் பெரியார் சிலை இடிக்கப்படும், என்ற பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவைக் கண்டித்தும் தஞ்சையில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

திரிபுராவில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்த கையேடு அம்மாநிலத்தில் இருந்த லெனின் சிலை இடித்து அகற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜாவை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு தமிழகம் முழுவது எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து அந்த பதிவை நீக்கினார். 

இந்த நிலையில் பா.ஜ.க. அரசின் இந்தப் போக்கை கண்டித்து தஞ்சையில் உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரியை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஊர்வலமாகச் சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கண்டனங்களை தெரிவித்தனர்.



காவல்துறை அனுமதியை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் எச்.ராஜாவை கைது செய்யாவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் தொடரும் என்று எச்சரித்தனர்.



Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...