காவிரி விவகாரத்தில் சட்ட நிபுணர்கள் ஆலோசனைப்படி நடவடிக்கை - சித்தராமையா

காவிரி விவகாரத்தில் சட்ட நிபுணர்கள் ஆலோசனைப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரத்தில் சட்ட நிபுணர்கள் ஆலோசனைப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. பா.ஜ.க, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என இந்த கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தின.

உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு செய்தவற்காக சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை நடத்தவும், நாளை காவிரி வாரியம் குறித்து அமைக்கப்பட்டுள்ள 4 மாநில பிரதிநிதிகள் கொண்ட குழுவில் தங்கள் நிலைப்பாட்டை வெளிபடுத்தவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

கூட்டம் முடிந்த பின்னர் முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசுகையில், “காவிரி மேலாண்மை வாரியத்தின் செயல்பாடுகள் என்ன? என்பது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் தெளிவாக கூறப்படவில்லை. சட்ட நிபுணர்கள் தரும் ஆலோசனைப்படி காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என எதிர்க்கட்சிகள் கூறியுள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...