வழிதவறி ஊருக்குள் புகுந்த புள்ளிமானை பத்திரமாக மீட்ட வனத்துறையினர்

கோவை மாவட்டம் மருதமலை அருகே வழிதவறி குடியிருப்பு பகுதிகளுக்கு சுற்றித் திரிந்த புள்ளி மானை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் கொண்டு சென்றுவிட்டனர்.

கோவை : கோவை மாவட்டம் மருதமலை அருகே வழிதவறி குடியிருப்பு பகுதிகளுக்கு சுற்றித் திரிந்த புள்ளி மானை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் கொண்டு சென்றுவிட்டனர்.

கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான மருதமலை வனப்பகுதிக்குள் இருந்து மூன்று நாட்களுக்கு முன்பு 3 வயது மதிக்கத்தக்க புள்ளிமான்  கல்லீரம்பாளையம், ஐ.ஓ.பி. காலனி, பொம்மணம்பாளையம் உள்ளிட்ட பகுதியில் சுற்றி திரிவதாக வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து, மூன்று நாட்களாக தேடப்பட்ட மான் இன்று காலை மருதமலை முருகன் நகர் குடியிருப்பு பகுதி அருகே ஒரு புதரில் இருப்பதாக பொதுமக்கள் வனத்துறையினருக்கு மீண்டும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வன அதிகாரிகள், புள்ளிமானை பத்திரமாக மீட்டு, பாரதியார் பல்கலைக்கழகத்தின் வனப்பகுதி ஒட்டிய பின் பகுதியில் உள்ள நூறு நாள் குட்டை பகுதியில் விட்டனர். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...