திருப்பூர் மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்துள்ளதால் தக்காளி விலை அதிகரித்துள்ளது.
திருப்பூர் : திருப்பூர் மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்துள்ளதால் தக்காளி விலை அதிகரித்துள்ளது.
திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு திருப்பூர் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் பல்லடம், தாராபுரம், பொங்கலூர் ஆகிய இடங்களில் இருந்தும் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. விளைச்சல் அதிகரித்துள்ளதால் கடந்த சில நாட்களாக சுமார் 20 டன் தக்காளி விற்பனைக்கு வந்து கொண்டிருந்தது. இதன் காரணமாக 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.70-க்கு விற்கப்பட்டது. ஒரு கிலோ தக்காளியின் மொத்த விலை ரூ.5 வரை இருந்தது. சில்லரைக்கு கிலோ ரூ.8-க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து குறைந்து சுமார் 8 டன் தக்காளி மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது. இதனால், ஒரு பெட்டி தக்காளி ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ தக்காளியின் மொத்த விலை ரூ.6 ஆக இருந்ததால் மளிகை கடை, தள்ளுவண்டிகளில் ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இது குறித்து விவசாயிகள் கூறும் போது, "நன்கு பழுத்து கனிந்த பழங்களை பறிக்காமல் செடியிலேயே விட்டு விட்டு, நல்ல தரமான கெட்டியான நிலையில் உள்ள தக்காளியை மட்டுமே பறித்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம். இதனால் வரத்து குறைந்துள்ளது. விலையும் உயர்ந்துள்ளது." என்றனர்.
திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு திருப்பூர் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் பல்லடம், தாராபுரம், பொங்கலூர் ஆகிய இடங்களில் இருந்தும் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. விளைச்சல் அதிகரித்துள்ளதால் கடந்த சில நாட்களாக சுமார் 20 டன் தக்காளி விற்பனைக்கு வந்து கொண்டிருந்தது. இதன் காரணமாக 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.70-க்கு விற்கப்பட்டது. ஒரு கிலோ தக்காளியின் மொத்த விலை ரூ.5 வரை இருந்தது. சில்லரைக்கு கிலோ ரூ.8-க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து குறைந்து சுமார் 8 டன் தக்காளி மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது. இதனால், ஒரு பெட்டி தக்காளி ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ தக்காளியின் மொத்த விலை ரூ.6 ஆக இருந்ததால் மளிகை கடை, தள்ளுவண்டிகளில் ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இது குறித்து விவசாயிகள் கூறும் போது, "நன்கு பழுத்து கனிந்த பழங்களை பறிக்காமல் செடியிலேயே விட்டு விட்டு, நல்ல தரமான கெட்டியான நிலையில் உள்ள தக்காளியை மட்டுமே பறித்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம். இதனால் வரத்து குறைந்துள்ளது. விலையும் உயர்ந்துள்ளது." என்றனர்.