மூதாட்டியை மீட்டு மகளிடம் ஒப்படைத்த ஈர நெஞ்சம் அறக்கட்டளை

கோவையில் தனியாக தவித்த மூதாட்டியை மீட்ட ஈர நெஞ்சம் அறக்கட்டளையினர் அவரது மகளிடம் சேர்த்துள்ளனர்.

கோவை: கோவையில் தனியாக தவித்த மூதாட்டியை மீட்ட ஈர நெஞ்சம் அறக்கட்டளையினர் அவரது மகளிடம் சேர்த்துள்ளனர்.

கடந்த 6-ம் தேதி கோவை ஆம்னி பேருந்து நிலையம் அருகே உள்ள குப்பை கிடங்கு பகுதியில் ஆதரவற்ற நிலையில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரை இருந்தார். 

அவர் மீட்கப்பட்டு ஈரநெஞ்சம் அறக்கட்டளை பராமரிப்பில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி முதியோர் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அந்த மூதாட்டியின் உறவினரைத் தேடும் முயற்சியை ஈரநெஞ்சம் அறக்கட்டளை மேற்கொண்டது. 

தொடர்ந்து, அந்த மூதாட்டியின் பெயர் சபீரா என்பதும் கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த ஆயிஷா என்பவரது தாய் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, ஆயிஷா-வுக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் ஈர நெஞ்சம் அறக்கட்டளைக்கு சென்ற அவர் தனது தாயைப் பார்த்து கதறி அழுதார். 

மேலும், அவர் கூறும் போது, "குன்னூரில் எனது சகோதரர் வீட்டில் வசித்து வந்தார். கடந்த மாதம் 28-ம் தேதி அவர் வீட்டில் இருந்து மாயமானார். அன்று முதல் பல்வேறு இடங்களில் அவரை தேடினோம். ஆனால் கிடைக்கவில்லை. அம்மாவை காப்பாற்றி பராமரித்து எங்களிடம் ஒப்படைத்த ஈர நெஞ்சம் அறக்கட்டளைக்கு நன்றி." என்றார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...