கோவையில் தனியாக தவித்த மூதாட்டியை மீட்ட ஈர நெஞ்சம் அறக்கட்டளையினர் அவரது மகளிடம் சேர்த்துள்ளனர்.
கோவை: கோவையில் தனியாக தவித்த மூதாட்டியை மீட்ட ஈர நெஞ்சம் அறக்கட்டளையினர் அவரது மகளிடம் சேர்த்துள்ளனர்.
கடந்த 6-ம் தேதி கோவை ஆம்னி பேருந்து நிலையம் அருகே உள்ள குப்பை கிடங்கு பகுதியில் ஆதரவற்ற நிலையில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரை இருந்தார்.
அவர் மீட்கப்பட்டு ஈரநெஞ்சம் அறக்கட்டளை பராமரிப்பில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி முதியோர் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து அந்த மூதாட்டியின் உறவினரைத் தேடும் முயற்சியை ஈரநெஞ்சம் அறக்கட்டளை மேற்கொண்டது.
தொடர்ந்து, அந்த மூதாட்டியின் பெயர் சபீரா என்பதும் கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த ஆயிஷா என்பவரது தாய் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, ஆயிஷா-வுக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் ஈர நெஞ்சம் அறக்கட்டளைக்கு சென்ற அவர் தனது தாயைப் பார்த்து கதறி அழுதார்.
மேலும், அவர் கூறும் போது, "குன்னூரில் எனது சகோதரர் வீட்டில் வசித்து வந்தார். கடந்த மாதம் 28-ம் தேதி அவர் வீட்டில் இருந்து மாயமானார். அன்று முதல் பல்வேறு இடங்களில் அவரை தேடினோம். ஆனால் கிடைக்கவில்லை. அம்மாவை காப்பாற்றி பராமரித்து எங்களிடம் ஒப்படைத்த ஈர நெஞ்சம் அறக்கட்டளைக்கு நன்றி." என்றார்.
கடந்த 6-ம் தேதி கோவை ஆம்னி பேருந்து நிலையம் அருகே உள்ள குப்பை கிடங்கு பகுதியில் ஆதரவற்ற நிலையில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரை இருந்தார்.
அவர் மீட்கப்பட்டு ஈரநெஞ்சம் அறக்கட்டளை பராமரிப்பில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி முதியோர் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து அந்த மூதாட்டியின் உறவினரைத் தேடும் முயற்சியை ஈரநெஞ்சம் அறக்கட்டளை மேற்கொண்டது.
தொடர்ந்து, அந்த மூதாட்டியின் பெயர் சபீரா என்பதும் கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த ஆயிஷா என்பவரது தாய் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, ஆயிஷா-வுக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் ஈர நெஞ்சம் அறக்கட்டளைக்கு சென்ற அவர் தனது தாயைப் பார்த்து கதறி அழுதார்.
மேலும், அவர் கூறும் போது, "குன்னூரில் எனது சகோதரர் வீட்டில் வசித்து வந்தார். கடந்த மாதம் 28-ம் தேதி அவர் வீட்டில் இருந்து மாயமானார். அன்று முதல் பல்வேறு இடங்களில் அவரை தேடினோம். ஆனால் கிடைக்கவில்லை. அம்மாவை காப்பாற்றி பராமரித்து எங்களிடம் ஒப்படைத்த ஈர நெஞ்சம் அறக்கட்டளைக்கு நன்றி." என்றார்.