புகார் அளிக்கச் சென்றவர்களை தரக்குறைவாகப் பேசிய ஆய்வாளர்: காவல் நிலையம் முற்றுகை

புகார் அளிக்கச் சென்றவர்களை தரக்குறைவாக பேசிய காவல் ஆய்வாளரைக் கண்டித்து திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டனர்.

திருப்பூர்: புகார் அளிக்கச் சென்றவர்களை தரக்குறைவாக பேசிய காவல் ஆய்வாளரைக் கண்டித்து திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டனர்.



திருப்பூர் தென்னம்பாளையத்தை சேர்ந்த சண்முகம் - மகாலட்சுமி தம்பதியினர். இவர்களது 17 வயது மகள் அவினாசி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார்.

இவருக்கும் கல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாதவன் என்பவருக்கும் காதல் ஏற்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். 

இந்நிலையில், காவல் நிலையத்தில் அளித்த புகாரையடுத்து சண்முகத்தின் 17 வயது மகள் கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்நிலையில், தனது மகளை ஏமாற்றிய மாதவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சண்முகம் மற்றும் அவரது மனைவி நேற்று திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஆனால், அவர்களது புகாரை பெற மறுத்த காவல் ஆய்வாளர் தென்னரசு அவர்களை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, தகாத வார்த்தைகள் பேசிய காவல் ஆய்வாளரைக் கண்டித்து பா.ஜ.க.வினர் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகர உதவி ஆணையரிடம் மனு அளித்தனர். அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வெள்ளிக்கிழமை மாலை பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...