புகார் அளிக்கச் சென்றவர்களை தரக்குறைவாக பேசிய காவல் ஆய்வாளரைக் கண்டித்து திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டனர்.
திருப்பூர்: புகார் அளிக்கச் சென்றவர்களை தரக்குறைவாக பேசிய காவல் ஆய்வாளரைக் கண்டித்து திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டனர்.

திருப்பூர் தென்னம்பாளையத்தை சேர்ந்த சண்முகம் - மகாலட்சுமி தம்பதியினர். இவர்களது 17 வயது மகள் அவினாசி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார்.
இவருக்கும் கல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாதவன் என்பவருக்கும் காதல் ஏற்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில், காவல் நிலையத்தில் அளித்த புகாரையடுத்து சண்முகத்தின் 17 வயது மகள் கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்நிலையில், தனது மகளை ஏமாற்றிய மாதவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சண்முகம் மற்றும் அவரது மனைவி நேற்று திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
ஆனால், அவர்களது புகாரை பெற மறுத்த காவல் ஆய்வாளர் தென்னரசு அவர்களை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, தகாத வார்த்தைகள் பேசிய காவல் ஆய்வாளரைக் கண்டித்து பா.ஜ.க.வினர் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகர உதவி ஆணையரிடம் மனு அளித்தனர். அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வெள்ளிக்கிழமை மாலை பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

திருப்பூர் தென்னம்பாளையத்தை சேர்ந்த சண்முகம் - மகாலட்சுமி தம்பதியினர். இவர்களது 17 வயது மகள் அவினாசி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார்.
இவருக்கும் கல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாதவன் என்பவருக்கும் காதல் ஏற்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில், காவல் நிலையத்தில் அளித்த புகாரையடுத்து சண்முகத்தின் 17 வயது மகள் கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்நிலையில், தனது மகளை ஏமாற்றிய மாதவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சண்முகம் மற்றும் அவரது மனைவி நேற்று திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
ஆனால், அவர்களது புகாரை பெற மறுத்த காவல் ஆய்வாளர் தென்னரசு அவர்களை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, தகாத வார்த்தைகள் பேசிய காவல் ஆய்வாளரைக் கண்டித்து பா.ஜ.க.வினர் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகர உதவி ஆணையரிடம் மனு அளித்தனர். அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வெள்ளிக்கிழமை மாலை பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.