பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டும் இடத்தில் போராட்டம் நடத்திய 100-க்கும் மேற்பட்ட அனைத்துக் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டும் இடத்தில் போராட்டம் நடத்திய 100-க்கும் மேற்பட்ட அனைத்துக் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகளை கட்டி வருகின்றது. முன்னதாக தேக்குவட்டை, மஞ்சகண்டி ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் மூன்றாவது தடுப்பணையை கோட்டத்துறை என்ற இடத்தில் கட்டி முடிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றது.
தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், ஆதி தமிழர் பேரவை நிறுவனர் ஆதியமான், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், எஸ்.டி.பி.ஐ, மற்றும் விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கேரளாவிற்கு தடுப்பணையை பார்வையிட சென்றனர்.

அவர்களை மாநில எல்லைப் பகுதியான ஆனைகட்டியில் தமிழக காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது அனைத்து கட்சியினர் கேரள அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தியதுடன் மறியலிலும் ஈடுபட்டனர். தடுப்பணை கட்ட கூடாது என்ற கோரிக்கை தொடர்பாக கேரள முதலமைச்சரை நேரடியாக சந்தித்து பேச இருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, அனைத்துக் கட்சி குழுவினர் கேரள பகுதிக்குள் சென்றால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதால் மாநில எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்ட அவர்களை போலீசார் கைது செய்தனர்.

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகளை கட்டி வருகின்றது. முன்னதாக தேக்குவட்டை, மஞ்சகண்டி ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் மூன்றாவது தடுப்பணையை கோட்டத்துறை என்ற இடத்தில் கட்டி முடிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றது.
தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், ஆதி தமிழர் பேரவை நிறுவனர் ஆதியமான், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், எஸ்.டி.பி.ஐ, மற்றும் விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கேரளாவிற்கு தடுப்பணையை பார்வையிட சென்றனர்.

அவர்களை மாநில எல்லைப் பகுதியான ஆனைகட்டியில் தமிழக காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது அனைத்து கட்சியினர் கேரள அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தியதுடன் மறியலிலும் ஈடுபட்டனர். தடுப்பணை கட்ட கூடாது என்ற கோரிக்கை தொடர்பாக கேரள முதலமைச்சரை நேரடியாக சந்தித்து பேச இருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, அனைத்துக் கட்சி குழுவினர் கேரள பகுதிக்குள் சென்றால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதால் மாநில எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்ட அவர்களை போலீசார் கைது செய்தனர்.