கேரள அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்துக் கட்சியினர் கைது

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டும் இடத்தில் போராட்டம் நடத்திய 100-க்கும் மேற்பட்ட அனைத்துக் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

கோவை: பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டும் இடத்தில் போராட்டம் நடத்திய 100-க்கும் மேற்பட்ட அனைத்துக் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.



பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகளை கட்டி வருகின்றது. முன்னதாக தேக்குவட்டை, மஞ்சகண்டி ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் மூன்றாவது தடுப்பணையை கோட்டத்துறை என்ற இடத்தில் கட்டி முடிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றது.

தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், ஆதி தமிழர் பேரவை நிறுவனர் ஆதியமான், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், எஸ்.டி.பி.ஐ, மற்றும் விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கேரளாவிற்கு தடுப்பணையை பார்வையிட சென்றனர்.



அவர்களை மாநில எல்லைப் பகுதியான ஆனைகட்டியில் தமிழக காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது அனைத்து கட்சியினர் கேரள அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தியதுடன் மறியலிலும் ஈடுபட்டனர். தடுப்பணை கட்ட கூடாது என்ற கோரிக்கை தொடர்பாக கேரள முதலமைச்சரை நேரடியாக சந்தித்து பேச இருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். 

இதனையடுத்து, அனைத்துக் கட்சி குழுவினர் கேரள பகுதிக்குள் சென்றால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதால் மாநில எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்ட அவர்களை போலீசார் கைது செய்தனர். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...