தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவதில் பா.ஜ.க.வினருக்கு தொடர்பு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பா.ஜ.க., தேசிய தலைவர் அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவதில் பா.ஜ.க.வினருக்கு தொடர்பு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பா.ஜ.க., தேசிய தலைவர் அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அமித் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது :- ஒரு கட்சி என்ற முறையில், பறந்த அளவிலான கருத்துக்கள் மற்றும் கொள்கைகளை இந்தியாவில் இணைத்துக்கொள்ள முடியும் என்று நாங்கள் பா.ஜ.க.,வை நம்புகிறோம். நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் நம் பெரிய தேசத்தை எப்படிக் கருதினார்கள் என்பதுதான் இது. சிலைகளை அழிப்பதில் சமீபத்திய பிரச்சினை மிகவும் துரதிர்ஷ்டமானது. யாரும் சிலைகளை சேதப்படுத்துவதில் நாங்கள் ஒரு கட்சியாக ஆதரிக்கவில்லை. மக்களுடைய வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுவதே எங்கள் முக்கிய நோக்கம். இந்தியாவில் உள்ள எல்லா மக்களுக்கும் எங்களது பணி மற்றும் செயல்பாடுகள் பெரிதும் பாராட்டை பெற்று உள்ளன. எங்கள் கூட்டணி அரசாங்கம் 20 மாநிலங்களில் சேவை செய்து வருகிறது.
தமிழ்நாடு மற்றும் திரிபுரா ஆகிய மாநில கட்சி தொண்டர்களுக்கும் கூறிக்கொள்கிறேன். பா.ஜ.க. தொடர்புடைய எந்த நபரும் சிலைகளை சேதப்படுத்துவதில் தொடர்பு இருப்பதாகக் கண்டறிந்தால் கட்சியில் இருந்து கடுமையான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அமித் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது :- ஒரு கட்சி என்ற முறையில், பறந்த அளவிலான கருத்துக்கள் மற்றும் கொள்கைகளை இந்தியாவில் இணைத்துக்கொள்ள முடியும் என்று நாங்கள் பா.ஜ.க.,வை நம்புகிறோம். நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் நம் பெரிய தேசத்தை எப்படிக் கருதினார்கள் என்பதுதான் இது. சிலைகளை அழிப்பதில் சமீபத்திய பிரச்சினை மிகவும் துரதிர்ஷ்டமானது. யாரும் சிலைகளை சேதப்படுத்துவதில் நாங்கள் ஒரு கட்சியாக ஆதரிக்கவில்லை. மக்களுடைய வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுவதே எங்கள் முக்கிய நோக்கம். இந்தியாவில் உள்ள எல்லா மக்களுக்கும் எங்களது பணி மற்றும் செயல்பாடுகள் பெரிதும் பாராட்டை பெற்று உள்ளன. எங்கள் கூட்டணி அரசாங்கம் 20 மாநிலங்களில் சேவை செய்து வருகிறது.
தமிழ்நாடு மற்றும் திரிபுரா ஆகிய மாநில கட்சி தொண்டர்களுக்கும் கூறிக்கொள்கிறேன். பா.ஜ.க. தொடர்புடைய எந்த நபரும் சிலைகளை சேதப்படுத்துவதில் தொடர்பு இருப்பதாகக் கண்டறிந்தால் கட்சியில் இருந்து கடுமையான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.