திரிபுராவில் புதிய அரசு ஆட்சியமைக்க உள்ள நிலையில், பா.ஜ.க., கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திரிபுராவில் புதிய அரசு ஆட்சியமைக்க உள்ள நிலையில், பா.ஜ.க., கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திரிபுரா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. இதன்மூலம் 25 ஆண்டுகால கம்யூனிஸ்டு ஆட்சி முடிவுக்கு வந்தது. மொத்தம் உள்ள 60 இடங்களில் பா.ஜ.க. கூட்டணி 43 இடங்களைக் கைப்பற்றியது. பா.ஜ.க. இந்த வெற்றியை திரிபுரா மக்கள் முன்னணி என்ற மாநிலக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்து பெற்றது. தேர்தலின் போது மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நடந்த தேர்தல் மோதலில் பா.ஜ.க. தொண்டர்கள் 11 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக தேர்தல் முடிவு வெளியான பின்பு பா.ஜ.க. தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது, மேற்கு திரிபுரா மாவட்டத்தில் சித்தாய் பகுதியிலும், வடக்கு திரிபுரா மாவட்டத்தில் கதம்தலாவிலும் பா.ஜ.க. தொண்டர்களுக்கும் கம்யூனிஸ்டு தொண்டர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில், இரு கட்சியின் அலுவலகங்களும் தாக்கப்பட்டு சூறையாடப்பட்டன. கம்யூனிஸ்டு அலுவலகத்தில் இருந்த லெனின் சிலை தகர்க்கப்பட்டது. பதிலுக்கு பா.ஜ.க. அலுவலகம் தாக்கப்பட்டது. இருதரப்பினரும் மோதிக் கொண்டதால் பயங்கர கலவரம் மூண்டது. இதைத்தொடர்ந்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி கலவரக்காரர்களை விரட்டியடித்தனர்.
கலவரப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் போலீசாருடன் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டு ரோந்து சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திரிபுரா கலவரம் பற்றி தகவல் அறிந்ததும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உடனடியாக திரிபுரா ஆளுநர் தாதகத்தராய் மாநில போலீஸ் டி.ஜி.பி. ஏ.கே. சுக்லா ஆகியோருடன் தொடர்பு கொண்டு பேசினார். கலவரத்தை அடக்க மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கை நிலைநாட்ட தேவையான நடவடிக்கை எடுக்குமாறும், புதிய அரசு பதவி ஏற்கும் வரை கலவரம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.

திரிபுரா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. இதன்மூலம் 25 ஆண்டுகால கம்யூனிஸ்டு ஆட்சி முடிவுக்கு வந்தது. மொத்தம் உள்ள 60 இடங்களில் பா.ஜ.க. கூட்டணி 43 இடங்களைக் கைப்பற்றியது. பா.ஜ.க. இந்த வெற்றியை திரிபுரா மக்கள் முன்னணி என்ற மாநிலக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்து பெற்றது. தேர்தலின் போது மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நடந்த தேர்தல் மோதலில் பா.ஜ.க. தொண்டர்கள் 11 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக தேர்தல் முடிவு வெளியான பின்பு பா.ஜ.க. தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது, மேற்கு திரிபுரா மாவட்டத்தில் சித்தாய் பகுதியிலும், வடக்கு திரிபுரா மாவட்டத்தில் கதம்தலாவிலும் பா.ஜ.க. தொண்டர்களுக்கும் கம்யூனிஸ்டு தொண்டர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில், இரு கட்சியின் அலுவலகங்களும் தாக்கப்பட்டு சூறையாடப்பட்டன. கம்யூனிஸ்டு அலுவலகத்தில் இருந்த லெனின் சிலை தகர்க்கப்பட்டது. பதிலுக்கு பா.ஜ.க. அலுவலகம் தாக்கப்பட்டது. இருதரப்பினரும் மோதிக் கொண்டதால் பயங்கர கலவரம் மூண்டது. இதைத்தொடர்ந்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி கலவரக்காரர்களை விரட்டியடித்தனர்.
கலவரப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் போலீசாருடன் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டு ரோந்து சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திரிபுரா கலவரம் பற்றி தகவல் அறிந்ததும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உடனடியாக திரிபுரா ஆளுநர் தாதகத்தராய் மாநில போலீஸ் டி.ஜி.பி. ஏ.கே. சுக்லா ஆகியோருடன் தொடர்பு கொண்டு பேசினார். கலவரத்தை அடக்க மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கை நிலைநாட்ட தேவையான நடவடிக்கை எடுக்குமாறும், புதிய அரசு பதவி ஏற்கும் வரை கலவரம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.